பக்கம் எண் :

250

மலையருவி

தாயின் கதை

ஆராரோ ஆராரோ - கண்ணேநீ
        ஆரிரரோ ஆராரோ.

    ஒருத்திக்கொரு மகள்பிறந்தேன் - கண்ணேநான்
        ஒண்டியிலே உலகம்வந்தேன்.

    தகப்பன்வந்து தாராபுரம் - கண்ணேஎன்
        தாய்வந்து தர்மபுரி.

    அண்ணன் இல்லை தம்பி இல்லை - கண்ணே எனக்கு
        அக்காள் இல்லை தங்கை இல்லை.

    பொன்னுண்ணாலும் பொன்னுப்போலே -
                                கண்ணேஎன்னைப்
    பொத்திப்பொத்தி வளர்த்தாங்களே.        
    

5

காலையிலே ஒருதுணியாம் - கண்ணேஎனக்கு
        மாலையிலே மறுதுணியாம்.

    காய்ச்சல்குளிர் ஆட்டப்போய்க் - கண்ணேஎன்
        தாய்க்குப்பால் வற்றப்போய்த்

    தாராளமாய்ப் பால்கொடுக்கக் - கண்ணேஎனக்குக்
        காராம்பசு வாங்கினாளாம்.

    துணித்தொட்டில் வேணுமிண்ணு - கண்ணேஎனக்கு
        மணிக்கட்டில் வாங்கினாளாம்.

    பீத்துணி கசக்கத்தாதி - கண்மணியே
        பால்துணி கசக்கத்தாதி.                     

10

 பொட்டுவைக்க ரெண்டுதாதி - கண்மணியே
        சட்டைபோட மூணுதாதி.

    தாங்கித்தாங்கித் தூங்கைவைக்கக் - கண்மணியே
        தாராட்டத் தாதிநாலு.

    பாலூட்டத் தாதிநாலு - கண்மணியே
        பசுமேய்க்கத் தாதிநாலு.

    ராவெல்லாம் கண்விழித்துக் - கண்மணியே
        காவல்காக்கத் தாதிநாலு