த
தாயின் கதை
ஆராரோ ஆராரோ - கண்ணேநீ
ஆரிரரோ ஆராரோ.
ஒருத்திக்கொரு மகள்பிறந்தேன்
- கண்ணேநான்
ஒண்டியிலே உலகம்வந்தேன்.
தகப்பன்வந்து தாராபுரம்
- கண்ணேஎன்
தாய்வந்து தர்மபுரி.
அண்ணன் இல்லை தம்பி இல்லை
- கண்ணே எனக்கு
அக்காள் இல்லை தங்கை
இல்லை.
பொன்னுண்ணாலும் பொன்னுப்போலே
-
கண்ணேஎன்னைப்
பொத்திப்பொத்தி
வளர்த்தாங்களே.
5
காலையிலே ஒருதுணியாம் -
கண்ணேஎனக்கு
மாலையிலே மறுதுணியாம்.
காய்ச்சல்குளிர் ஆட்டப்போய்க்
- கண்ணேஎன்
தாய்க்குப்பால் வற்றப்போய்த்
தாராளமாய்ப்
பால்கொடுக்கக் - கண்ணேஎனக்குக்
காராம்பசு வாங்கினாளாம்.
துணித்தொட்டில் வேணுமிண்ணு
- கண்ணேஎனக்கு
மணிக்கட்டில்
வாங்கினாளாம்.
பீத்துணி கசக்கத்தாதி -
கண்மணியே
பால்துணி கசக்கத்தாதி.
10
பொட்டுவைக்க ரெண்டுதாதி
- கண்மணியே
சட்டைபோட மூணுதாதி.
தாங்கித்தாங்கித் தூங்கைவைக்கக்
- கண்மணியே
தாராட்டத் தாதிநாலு.
பாலூட்டத் தாதிநாலு - கண்மணியே
பசுமேய்க்கத் தாதிநாலு.
ராவெல்லாம் கண்விழித்துக்
- கண்மணியே
காவல்காக்கத் தாதிநாலு
|