தண
தண்ணிஊற்றத் தாதிநாலு
- கண்மணியே
தலைஉலர்த்தத் தாதிநாலு.
15
சிக்கெடுக்கத் தாதிநாலு
- கண்மணியே
செல்லங்கொஞ்சத் தாதிநாலு.
கையமுக்கத் தாதிநாலு -
கண்மணியே
கால்அமுக்கத் தாதிநாலு
கும்மாளம்போடத் தாதிவேறே
- கண்மணியே
கும்மியடிக்கத் தாதிவேறே.
வீர்வீரென்று அழுகையிலே
- கண்மணியே
வேடிக்கைக்காட்டத்
தாதிவேறே.
சத்தம்போட்டு அழுகையிலே
- கண்மணியே
சதிராடத் தாதிவேறே.
20
செல்லங்கொஞ்சி அழுகையிலே
- கண்மணியே
சிரிப்புக்காட்டத்
தாதவேறே.
படிக்கட்டிலே
விழுந்திடாமே - கண்ணேஎன்னைப்
பாதுகாக்கத்
தாதிநாலு.
பளிங்கிலே வழுக்கிடாமே
- கண்மணியே
பாதுகாக்கத்
தாதிநாலு.
கைகால் பிசகிடாமே -
கண்மணியே
கண்டபடி சுளுக்கிடாமே
ஊர்ந்துகிட்டுத்
திரிகையிலே - கண்மணியே
உரல்மேலே
மோதிடாமே.
25
பால்குடிக்கும் நேரத்திலே
- கண்மணியே
புறங்காலைப்
பாலேறாமே
சின்னச்சின்னப்
பிள்ளைகூடக் - கண்மணியே
சேர்ந்துநான்
விளையாடையிலே
சீக்குப்பிணி அண்டிடாமே
- கண்மணியே
சேதம்ஒண்ணும்
ஆகிடாமே
ஈயெறும்பு கடிச்சுடாமே -
கண்மணியே
எல்லாம்பார்க்கத்
தாதிவேறே.
|