ம
மருந்தரைக்கத் தாதிவேறே
- கண்மணியே
மருந்துபோடத் தாதிவேறே.
30
தலைகால்என் னமும்வலித்தால்
- கண்மணியே
தைலந்தேய்க்கத் தாதிவேறே.
ஊஞ்சல்கட்டத் தாதிவேறே
- கண்மணியே
ஊஞ்சலாட்டத் தாதிவேறே.
எண்ணெயிலே ஒத்தடமும் -
கண்மணியே
வெந்நீரிலே ஒத்தடமும்
இன்னம்வேறே ஒத்தடமும் -
கண்மணியே
எனக்குக்கொடுக்கத்
தாதிவேறே.
செல்வத்தி லேபிறந்தேன்
- கண்மணியே
செல்வத்தி லேவளர்ந்தேன்.
35
ஆடுஎன்ன மாடுஎன்ன - கண்மணியே
காடுஎன்ன வீடுஎன்ன
முத்துஎன்ன ரத்னம்என்ன -
கண்மணியே
சொத்துஎன்ன கெத்துஎன்ன
வகைவகையாய் நகைகள்என்ன
- கண்மணியே
ஜதைஜதையாய் நகைகள்என்ன
சாரட்டுவண்டிஎன்ன - கண்மணியே
சலங்கைபோட்ட வண்டிஎன்ன
அஞ்சு வயசிலேநான் - கண்மணியே
அரிசித்தரி படிச்சேனம்மா.
40
பத்துவயசுக் குள்ளேநான் -
கண்மணியே
படிப்பெல்லாம்
முடிச்சேனம்மா.
பன்னிரண்டு வயசிலேநான்
- கண்மணியே
பருவமான காலத்திலே
வாலிபப் பிராயத்திலே -
கண்மணியே
வாழ்க்கைப்பட்டேன்
உங்கப்பாவுக்கு
வருசம்பத் திருவதுமாச்சு -
கண்மணியே
வாசனைக்கும் பிள்ளையில்லை.
|