பக்கம் எண் :

26

மலையருவி

நாழிஎண்ணெய் தேச்சிட்டாலும்
        நயனக்கொண்டை போட்டுட்டாலும்

    குலுக்கி நடந்திட்டாலும்
        குமரியாக மாட்டாய்நீயே.
                 

161

ஒட்டஒட்டான் பூவே
        உசக்கஇருக்கும் தாழம்பூவே

    கண்ணுவலிப் பூவேஉன்னைக்
        கண்டுரொம்ப நாளாச்சு.
                    

162

குருவனூற்றுக் காட்டிலேநான்
        கூலிக்கு உழுகையிலே

    படைத்த கடவுள்போலே
        பறக்குதம்மா மோட்டார்வண்டி
                 

163

குளத்துக்கு அங்கிட்டுநான்
        குதிரைக்குக் கண்ணிவச்சேன்

    குதிரைபடும் கண்ணியிலே
        குழந்தைப்பிள்ளை பட்டதம்மா
                 

164

ஆத்துக்கு அங்கிட்டுநான்
        ஆனைக்குக் கண்ணிவச்சேன்

    ஆனைபடும் கண்ணியிலே
        அத்தைமகள் பட்டுக்கிட்டாள் 
               

165

பருத்தி எடுக்கையிலே
        பலநாளும் பார்த்தசாமி

    ஒருத்தி எடுக்கையிலே
        ஓடிவரக் கூடாதோ? 
                         

166

வெள்ளைவெள்ளைச் சீலைக்காரி
        வெள்ளரிக்காய்க் கூடைக்காரி

    கோம்பைமலை வெள்ளரிக்காய்
        கொண்டுவாடி தின்னுபார்ப்போம்.   
               

167