ந
நாழிஎண்ணெய் தேச்சிட்டாலும்
நயனக்கொண்டை போட்டுட்டாலும்
குலுக்கி நடந்திட்டாலும்
குமரியாக மாட்டாய்நீயே.
161
ஒட்டஒட்டான் பூவே
உசக்கஇருக்கும் தாழம்பூவே
கண்ணுவலிப் பூவேஉன்னைக்
கண்டுரொம்ப நாளாச்சு.
162
குருவனூற்றுக் காட்டிலேநான்
கூலிக்கு உழுகையிலே
படைத்த கடவுள்போலே
பறக்குதம்மா மோட்டார்வண்டி
163
குளத்துக்கு அங்கிட்டுநான்
குதிரைக்குக் கண்ணிவச்சேன்
குதிரைபடும் கண்ணியிலே
குழந்தைப்பிள்ளை பட்டதம்மா
164
ஆத்துக்கு அங்கிட்டுநான்
ஆனைக்குக் கண்ணிவச்சேன்
ஆனைபடும் கண்ணியிலே
அத்தைமகள் பட்டுக்கிட்டாள்
165
பருத்தி எடுக்கையிலே
பலநாளும் பார்த்தசாமி
ஒருத்தி எடுக்கையிலே
ஓடிவரக் கூடாதோ?
166
வெள்ளைவெள்ளைச் சீலைக்காரி
வெள்ளரிக்காய்க் கூடைக்காரி
கோம்பைமலை
வெள்ளரிக்காய்
கொண்டுவாடி
தின்னுபார்ப்போம்.
167
|