கண
கண்டாங்கிச் சீலைக்காரி
கைரெண்டும் வளையல்காரி
கண்டால் வரச்சொல்லுங்கோ
ரெண்டாம்நம்பர்த்
தோட்டத்துக்கு.
168
ஆலம் விழுதுபோலே
அந்தப்புள்ளை தலைமயிரு
தூக்கி முடிஞ்சிட்டாளாம்
தூக்கணத்தாங் கூடுபோல
169
கானகக் கரிசலிலே
களையெடுக்கும் பொண்மயிலே
நீலக் கருங்குயிலே
நிற்கட்டுமா போகட்டுமா?
170
பாக்குத் துவர்க்குதடி
பழையஉறவு மங்குதடி
போட்டால் சிவக்குதில்லை
பொன்மயிலே உன்மயக்கம்
171
கச்சேரி கண்டபிள்ளை
கையெழுத்து வச்சபிள்ளை
போலீசைக் கண்டபிள்ளை
போதுமடி உன்உறவு
172
கறுத்தபிள்ளை
முழிசுருட்டிக்
கதவைஏண்டி திறந்துபோட்டாய்?
கறுத்தநாய் பூந்துக்கிட்டு
இழுத்துதடி அப்பன்சோற்றை.
173
மண்வெட்டி தோளில்வச்சு
மண்வெட்டப் போறவனே
மண்ணுத்தூக்க நானும்வாறேன்
மன்னாஎன்னைக் கூட்டிப்போடா.
174
|