வண
வண்ணாரப் பொண்ணொருத்தி
கிண்ணாரம்
வாசிக்கிறதைக்
கண்ணாலே பார்த்துநானும்
கண்கலங்கி நின்றேனடி.
182
ஆற்றங் கரையோரமாய்
அழகாநல்ல கல்புதைத்து
அழுக்கைஅடித் துக்கசக்கும்
அளகேசவண்ணான் வாறாண்டி.
183
கன்னார முருகாஅடா
கனஇரும்பு என்னடாநீ
இந்நேரம் என்னடாநீ
இரும்புத்தடி செஞ்சாச்சாடா?
184
இரும்பைநீ காயவச்சு
சிறுசம்மட்டியி லேயடிச்சு
பட்டாரெண் டையும்முடிச்சுக்
கட்டைவண்டி பூட்டிடடா.
185
கள்ளன்கிள்ளன் சாமத்திலே
கதவுடைத்துப் புகுந்திடாமே
தனிஇரும்பி லேயடிச்சு
தந்திடடா தாழ்ப்பாள்ரெண்டு.
186
குறும்பொண்ணுஞ் செய்யாதேடா
இரும்படித்துப் பிழைக்கும்பையா
இரும்புக் குலுமைஒண்ணு
திரும்பையிலே கொண்டாடாநீ.
187
கொத்துவேலைக் காரப்பையா
கொத்துவேலை தெரியுமாடா?
கல்லுக்கொத்து வேலையில்லை
கட்டட வேலையடா இது.
188
|