பக்கம் எண் :

New Page 1

290

மலையருவி

முத்தே முத்தேநீ கும்மியடி - அடி
        மோகன முத்தேநீ கும்மியடி
    கறுப்புக் கொசுவத்தைத் திருப்பிவச் சுக்கட்டும்
        கண்ணாடி முத்தேநீ கும்மியடி.

8

ஓடாதே ஓடாதே தொள்ளைக் காதா - நீ
        ஓட்டம் பிடிக்காதே இல்லிக்கண்ணா
    மாட்டு எலும்பை எடுத்துக்கிட்டு - நான்உன்
        மார்பெலும்பை யெல்லாம் தட்டிடுவேன்.

9

பத்துப் பெண்களும் கூடிக்கிட்டு - நம்ம
        பட்டணம் மைதானம் போகையிலே
    பார்த்துக்கிட் டிருந்த பறப்பயல் ஒருத்தன்
        பட்டுமுந் தாணிமேல் ஆசைவைத்தான்.     
       

10

ஊரான் ஊரான் தோட்டத்திலே - அங்கே
        ஒருத்தன் போட்டது வெள்ளரிக்காய்
    காசுக்கு ஒண்ணொண்ணு விற்கச்சொல்லி - அவன்
        காயிதம் போட்டானாம் வேட்டைக்காரன்.         

11

வேட்டைக்கா ரன்பணம் வெள்ளிப்பணம் - அது
        வேடிக்கை பார்க்குது சின்னப்பணம்
    வெள்ளிப் பணத்துக்கு ஆசைவச்சு- அவள்
        வீராயி வந்தாடி ஆராயி.

12

தேனும் உருளத் தினைஉருள - அந்தத்
        தேங்காய்த் தண்ணீரும் அலைமோத
    மாங்காய் கனிந்து விழுகுதுபார் - அந்த
        மகராசன் கட்டின தோட்டத்திலே.

13

இந்தநல்ல நிலா வெளிச்சத்திலே - அம்மா
        என்னைக்கல் லாலே அடிச்சதாரடி
    அவர்தாண்டி நம்ம எல்லாருக்கும் மாமன்
        அன்று மாம்பழங் கொடுத்தவரு.

14

ஆற்று மணலிலே ஊற்றெடுத்து - அம்மா
        அஞ்சாறு மாசமாச் சண்டைசெய்து
    வேற்று முகப்பட்டு வாறாரே - அம்மா
        வெள்ளிசங் கங்கட்டி வீசுங்கம்மா.

15