New Page 1
முத்தே முத்தேநீ
கும்மியடி - அடி
மோகன முத்தேநீ
கும்மியடி
கறுப்புக் கொசுவத்தைத் திருப்பிவச்
சுக்கட்டும்
கண்ணாடி முத்தேநீ கும்மியடி.
8
ஓடாதே ஓடாதே தொள்ளைக்
காதா - நீ
ஓட்டம் பிடிக்காதே
இல்லிக்கண்ணா
மாட்டு எலும்பை எடுத்துக்கிட்டு
- நான்உன்
மார்பெலும்பை யெல்லாம்
தட்டிடுவேன்.
9
பத்துப் பெண்களும் கூடிக்கிட்டு
- நம்ம
பட்டணம் மைதானம்
போகையிலே
பார்த்துக்கிட் டிருந்த
பறப்பயல் ஒருத்தன்
பட்டுமுந் தாணிமேல்
ஆசைவைத்தான்.
10
ஊரான் ஊரான் தோட்டத்திலே
- அங்கே
ஒருத்தன் போட்டது
வெள்ளரிக்காய்
காசுக்கு ஒண்ணொண்ணு விற்கச்சொல்லி
- அவன்
காயிதம் போட்டானாம்
வேட்டைக்காரன்.
11
வேட்டைக்கா ரன்பணம்
வெள்ளிப்பணம் - அது
வேடிக்கை பார்க்குது
சின்னப்பணம்
வெள்ளிப் பணத்துக்கு
ஆசைவச்சு- அவள்
வீராயி வந்தாடி ஆராயி.
12
தேனும் உருளத் தினைஉருள -
அந்தத்
தேங்காய்த் தண்ணீரும்
அலைமோத
மாங்காய் கனிந்து
விழுகுதுபார் - அந்த
மகராசன் கட்டின தோட்டத்திலே.
13
இந்தநல்ல நிலா வெளிச்சத்திலே
- அம்மா
என்னைக்கல் லாலே
அடிச்சதாரடி
அவர்தாண்டி நம்ம எல்லாருக்கும்
மாமன்
அன்று மாம்பழங்
கொடுத்தவரு.
14
ஆற்று மணலிலே ஊற்றெடுத்து
- அம்மா
அஞ்சாறு மாசமாச் சண்டைசெய்து
வேற்று முகப்பட்டு வாறாரே
- அம்மா
வெள்ளிசங் கங்கட்டி
வீசுங்கம்மா.
15
|