பக்கம் எண் :

தய

292

மலையருவி

தயிருக் கூடையைத் தலையிலே வைத்துத்
        தங்கக்கம் பிச்சீலைப் பட்டுடுப்போம்
    தயிருக்கூடை தளும்பினா லும்எங்கள்
        தங்கக்கம் பிச்சீலை மங்காது.       
        

2

மோருக் கூடையைத் தலையிலே வைத்து
        முத்துக்கம் பிச்சீலைப் பட்டுடுப்போம்
    மோருக் கூடைத ளும்பினா லும்எங்கள்
        முத்துச்சீ லைக்கம்பி மங்காது.

3

கும்மியடிக்கிற பெண்டுக ளாஒரு
        கோளாறு சொல்கிறேன் கேளுங்கடி
    அம்மியைத் தூக்கி மடியிலே கட்டி
        ஆழக் கிணற்றில் இறங்குங்கடி.

4

நெல்லு விளைந்ததைப் பாருங்கடி அம்மா
        நெல்லுகள் சாய்ந்ததைப் பாருங்கடி
    நேற்றுப் பிறந்தநம் பேரப் பிள்ளைக்கு
        மீசை முளைத்ததைப் பாருங்கடி.

5

ஆற்றிலே தண்ணீர் ஓடாதா - அம்மா
        ஆரால் குஞ்சுகள் மேயாதா?
    நேற்றுப் பிறந்த அத்தை மகனுக்கு
        நெற்றியிலே தண்ணீர் பாயாதா?

6

புத்தம் புதுச்சட்டி வாங்குங்கடி - அம்மா
        பூசைக்கு முஸ்தீப்புச் செய்யுங்கடி!
    நம்ம மாமனை நல்ல தனம்பண்ணி
        நல்ல ரூபாயைத் தட்டுங்கடி.

7

சித்திரை மாசத்து வெய்யிலிலே - என்னை
        விட்டுட்டுப் போனாயே பர்த்தாவே!
    பிள்ளை பிறக்கவும் பல்லு முளைக்கவும்
        பேர்வைக்க வந்தாயோ ராசாவே?
    

8

ஓடுறதண் ணீரைக் குறுக்காட்டி - ஒரு
        மல்லிகைச் செடியை வளரவைத்துக்
    கூடு குலுங்க ரதங்குலுங்க - அம்மா
        கூடப் புறப்பட்டாள் பொம்மியம்மா.

9