பக்கம் எண் :

வட

294

மலையருவி

வட்டப்பொட் டுகளும் வச்சுக்கிட்டு - அந்த
        வாணியப் பெண்களும் கூட்டிக்கிட்டுச்
    சொக்கவண் டிமேலே கோலம்வாறாரு
        சுப்பிர மணிய சாமியாரு.

18

சாராயக் காரா சதிகாரா - அடா
        சாராயம் விற்கிற ராமலிங்கம்!
    நீகொடுத் தபட்டைச் சாராயம் - இங்கே
        நித்தமும் சண்டைகள் வாங்குதப்பா.        
    

19

காக்காச் சோளம் கருஞ்சோளம் - எல்லாம்
        கலந்து குத்துற நாளையிலே
    துடிது டித்தஎன் துள்ளுமீ சைக்காரன்
        தூங்குறான் பாரம்மா தொட்டியிலே.

20

* * *

வள்ளியம்மை கும்மி

வாங்கடி வாங்கடி தோழிப்பெண்காள் - வள்ளி
        மாமயில் பாட்டைப் படியுங்கடி.
    கானலில் இருந்த மாமயிலே - கந்தன்
        கண்ட கதையைப் படியுங்கடி.

1

பொன்மான்பெற் றெடுத்த கண்மணி வள்ளியைக்
        கண்டார்க ளேகாட்டு வேடர்களும்
    இன்பமாய் அவர்கள் எடுத்தார்கள் கையிலே
        சுந்தர வள்ளி அம்மனையுந்தான்.
    

2

ஆணிபோல் கயிற்றை நல்லா முறுக்கி
        அழகான தொட்டி ஒண்ணுஞ் செய்து
    பேணி வளர்த்தார்கள் கோணா முகத்தோடே
        பொன்னுக்குப் பிறந்த கண்மணியே.

3

கொஞ்சிக் குழந்தையை முத்தமிட் டுஇன்னம்
        கொத்துக்கொத் தாக நகையும்போட்டு
    பத்தரை மாற்றுப் பொன்னைப்போ லேரொம்பப்
        பத்திர மாய்வளர்த்து வந்தார்கள்.
          

4