பக்கம் எண் :

கும்மி

295

காதுகுத் திப்பஞ்சு தக்கைவைச்சுச் - சின்னக்
        காலுக்குக் காலாழி பீலிமாட்டி
    கங்கணம் வேறே கையிலே பூட்டிக்
        கண்கள் ரெண்டுக்கும் மையிட்டார்கள்.        
    

5

கைக்குக் கணையாழி மோதிரமும் - பொன்
        கால்கள் ரெண்டுக்கும் காப்புகளும்
    கண்டதெல் லாம்போட்டுக் கண்குளி ரப்பார்த்துக்
        காப்பாற்றி வந்தார் கரிசனமாய்.
    

6

மங்கை பெரிய மனுசியாயி - மனம்
        குன்றாமல் காலங் கழிக்கையிலே
    மாரியாத் தாள்கூட மனசிரங்கி - மழை
        மட்டில்லாமல் பொழிய வைத்தாள்.

7

வெள்ளி முளைத்திட ஓரத்திலே - தினை
        விதைக்க நல்ல நிலம் பார்த்து
    வெட்டிப் பயிரிட்டு வேலிகட்டி - அங்கே
        வேடனெல் லாங்கூடிக் காடுசெய்தான்.

8

காடு விதைத்துப் பயிராகித் - தினை
        கதிரு வாங்கி மணிபிடித்துக்
    காட்டுவெள் ளாமையைப் பார்க்கப்பார்க்க - அவர்
        கண்கள்எல் லாமே கலங்கிப் போச்சு.      
      

9

அண்ணன்மா ருசொல்லைத் தட்டாமல் - வள்ளி
        ஆனந்த மாவேலைக் காரியோடே
    திண்ணைமே லெப்போதும் உட்கார்ந்து - நல்ல
        தினைமாவைத் தேனோடே சாப்பிடுவாள்.

10

காட்டுத் தினைவயல் காக்கையிலே - வள்ளி
        கல்லுங் கவணும்கை யிலேவைத்துக்
    காக்காய் குருவிஎல் லாந்துரத்த - மெத்தக்
        கம்பீர மாகக் கவணெறிந்தாள்.

11

ஆலோலம் ஆலோலம் என்றுசொல்லி - வள்ளி
        கோலா கலமாகக் கவணெறிந்தாள்.
    காட்டிலே தவஞ்செய்த நாரத முனிதான்
        கண்ணைத் திறந்துஇவ ளைப்பார்த்தான்.   
         

12