பக்கம் எண் :

New Page 1

தெம்மாங்கு

31

குமிளியிலே மூங்கில்வெட்டிக்
        குருவனூற்றுப் பாலங்கட்டிப்

    பாலத்து மேலிருந்து
        பந்தடித்தான் பாவிமகன்.
               

196

இத்தனை இடைஞ்சலிலே
        இருட்டடைஞ்ச கானலிலே

    பாறை இடைஞ்சலிலே
        பயமும்ரொம்பப் பிடிக்குதம்மா.   
            

197

கட்டக்கட்ட உச்சிநேரம்
        கரடிபுலி பாயும்நேரம்

    ஏத்துமீனு ஏறாதம்மா
        எங்கள்பஞ்சம் தீராதம்மா.
                   

198

சட்டைமேலே சட்டைபோட்டு
        சரிகைச்சட்டை மேலேபோட்டுத்

    தோட்டா வெடிஎடுத்துத்
        துரைமாரை முன்னேவிட்டு.
                    

199

சுட்டாராம் லோகன்துரை
        சுருளிமலை கிடுகிடுங்க

. . . . . . . . . . . . . . . . . . . . . . .
        . . . . . . . . . . . . . . .
                    

200

ஆற்றிலே வெள்ளம்வர
        ஆளுமுங்கத் தண்ணிவர

    தண்ணிவந்த ஆற்றோரம்
        தானா மயங்குறேனே.
                   

201

ஏலத் தடையைநீ
        இணக்கமாக் களையெடுடி

    தட்டுப் பலாவேநீ
        தட்டாமே பார்த்துக்கோடி. 
                   

202