New Page 1
குமிளியிலே மூங்கில்வெட்டிக்
குருவனூற்றுப் பாலங்கட்டிப்
பாலத்து மேலிருந்து
பந்தடித்தான் பாவிமகன்.
196
இத்தனை இடைஞ்சலிலே
இருட்டடைஞ்ச கானலிலே
பாறை இடைஞ்சலிலே
பயமும்ரொம்பப்
பிடிக்குதம்மா.
197
கட்டக்கட்ட உச்சிநேரம்
கரடிபுலி பாயும்நேரம்
ஏத்துமீனு ஏறாதம்மா
எங்கள்பஞ்சம் தீராதம்மா.
198
சட்டைமேலே சட்டைபோட்டு
சரிகைச்சட்டை மேலேபோட்டுத்
தோட்டா வெடிஎடுத்துத்
துரைமாரை முன்னேவிட்டு.
199
சுட்டாராம் லோகன்துரை
சுருளிமலை கிடுகிடுங்க
. . . . . . . . . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . .
200
ஆற்றிலே வெள்ளம்வர
ஆளுமுங்கத் தண்ணிவர
தண்ணிவந்த ஆற்றோரம்
தானா மயங்குறேனே.
201
ஏலத் தடையைநீ
இணக்கமாக் களையெடுடி
தட்டுப் பலாவேநீ
தட்டாமே பார்த்துக்கோடி.
202
|