பக்கம் எண் :

அப

340

மலையருவி

அப்போது திடுக்கிட்டுநான்
        படுக்கையைவிட் டெழுந்திருந்து
    அம்மாஅம் மாஎனக்கு
        அதிகத் தாகம் எடுக்கு தென்றேன்.
 

60

கல்லாநீ மோரூற்றினால்
        களையெல்லாம் தீருமென்றேன்.
    வனத்துச் சிறுக்கிஅவள்
        கனத்த குடம்இறக்கிக்
    கல்லாநான் சொன்னபடிகனமா மோரு ஊற்றினாள்.
        மோரைக் குடித்து விட்டு
    ஜோராஇளைப் பாறினேன்.
        களையெல்லாம் தீர்ந்த பின்னே
    கலயத்தை உடைத்து விட்டேன்.

65

_______

வெள்ளைக்காரன் பாட்டு

இன்னம் என்ன செய்தானையா
        இந்த வெள்ளைக் காரன்?
    இன்னம் என்ன செய்தானையா?
        எடுத்துச் சொல்லு கேட்பேன்.
   

1

காணாத தேசமெல்லாம்
        இந்த வெள்ளைக் காரன்
    கண்டுபிடிச் சானாமையா
        இந்த வெள்ளைக் காரன்.

2

எட்டாள தேசமெல்லாம்
        இந்த வெள்ளைக் காரன்
    எட்டிப்பிடிச் சானாமையா
        இந்த வெள்ளைக் காரன்.

3

கண்ணுக் கெட்டாத் தூரத்திலே
        இந்த வெள்ளைக் காரன்
    கப்ப லேறி வாறானையா
        இந்த வெள்ளைக் காரன்.
          

4

சின்னக் கப்பல் மேலே ஏறி
        இந்த வெள்ளைக் காரன்