New Page 1
கோட்டை யைச்சுத்திக்
கல்பொ றுக்கிப்
கோபுரங் கட்டினவளே
- ராசாத்தி
கோபுரங் கட்டினவளே.
19
பட்டுப் புடவை கட்டிக் கிட்டுத்
தண்ணிக்குப் போனவளே
- ராசாத்தி
தண்ணிக்குப் போனவளே.
20
தங்கத் தாலே புடைவை கட்டிச்
சண்டைக்குப் போனவளே
- ராசாத்தி
சண்டைக்குப் போனவளே.
21
பட்ட ணத்து வீதி யெல்லாம்
சுத்தப் போனவளே -
ராசாத்தி
சுத்தப் போனவளே.
22
ஆடு வரும் மாடு வரும்
கோடா கோடியே -
ராசாத்தி
கோடா கோடியே.
23
சல்லிக்கட்டு
சல்லிக் கட்டும் மல்லுக்
கட்டும்
சண்டைக்குக் காரணமே
- ராசாத்தி
சண்டைக்குக் காரணமே.
1
அரண் மனை வாசல் முன்னே
ஆயிரம் காளைகளாம்
- ராசாத்தி
ஆயிரம் காளைகளாம்.
2
ஆள்ஒண் ணுக்குக் காளை ஒண்ணு
அங்கே இருக்குதுபார்
- ராசாத்தி
அங்கே இருக்குதுபார்.
3
காளை எல்லாம் சாயம் பூசிக்
கருத்தாய் நிற்குதுபார்
- ராசாத்தி
கருத்தாய் நிற்குதுபார்.
4
|