என
என்குலமும் உன்குலமும்
என்சொத்தும் உன்சொத்தும்
ஏணி வைத்தால் எட்டுமாடா
எருமை மாட்டுப் பயலே
வாதுசெய் யாதேடா
வந்தவழி போய்ச் சேரடா
சேரடா
ஆ ஆ.
14
ஒருத்திக்கு ஒருமகண்டி
உன்னைநம்பி வந்தவண்டி
பொறுமை பொறுத்தவண்டி
போகவர ஏசாதேடி
அன்னமே பொன்னம்மா
கண்ணி ரண்டும்
சோருதடி
அன்னமே
ஏ ஏ.
15
ஆளிலொரு அழகன் நாண்டி
ஆயிரரூபா சொத்துக்
காரண்டி
பெரிய வீட்டுக் காரரில்எல்லாம்
பெரியதலை நான்தானடி
அன்னமே பொன்னம்மா
கண்ணிரண்டும்
சோருதடி
அன்னமே
ஏ ஏ.
16
பெரிய தலையா இருந்தாலும்
சின்னத் தலையா
இருந்தாலும்
பெரிசல்லடா எனக்கு மட்டும்
போய்ப்பயலே ஓடிப்
போடா
வாதுசெய் யாதேடா
வந்தவழி போய்ச்சேரடா
சேரடா
ஆ ஆ.
17
முச்சந்தி ரோட்டுப் பக்கம்
மூணுகுழி நிலமும்
வாங்கி
மூணுகுழி நிலத்தை வெட்ட
மூணுநூறு ஆள்பிடிச்சேன்
|