அன
அன்னமே பொன்னம்மா
கண்ணிரண்டும்
சோருதடி
அன்னமே
ஏ ஏ.
18
முச்சந்தி ரோட்டி லேநீ
முக்காடு போட்டால்
என்ன
மூணுநூறு ஆளு உன்னை
மொட்டை அடிச்சால்
என்ன
வாதுசெய் யாதேடா
வந்தவழி போய்ச்சேரடா
சேரடா
ஆ ஆ.
19
பெருமைநீ பண்ணாதேடி
பெருமைப் பேச்சுப் பேசாதேடி
அருமை குலைக்கா தேடி
அட்ட காசஞ் செய்யாதேடி
அன்னமே பொன்னம்மா
கண்ணி ரண்டும்
சோருதடி
அன்னமே
ஏ ஏ.
20
பொன்னேநீ பேசி னாலும்
என்னைநீ ஏசி னாலும்
என்னைநான் மறப்பே னோடி
பின்னேநான் போவே
னோடி
அன்னமே பொன்னம்மா
கண்ணி ரண்டும்
சேருதடி
அன்னமே
ஏ ஏ.
21
நான்யாரு நீயாரடா
சும்மா இங்கே நிற்காதேடா
சாமர்த்தியம் காட்டா தேடா
ஏமாந்து போவே னோடா
வாதுசெய் யாதேடா
வந்தவழி போய்ச்சேரடா
சேரடா
ஆ ஆ.
22
|