பக்கம் எண் :

மறந

64

மலையருவி

மறந்தால் என்னடா நீஎன்னை
        மறக்காட்டிப் போனால் என்ன
    எல்லாம்எனக் கொண்ணு தாண்டா
        ஏமாற்றப் பார்க்கா தேடா
    வாதுசெய் யாதேடா
        வந்தவழி போய்ச்சேரடா
                    சேரடா ஆ ஆ.     
          

23

 மானே மரகதமே
        மயிலே இளங்குயிலே
    தேனே திரவியமே
        தேடிவந்தேன் உன்னை நானே
    அன்னமே பொன்னம்மா
        கண்ணி ரண்டும் சோருதடி
                    அன்னமே ஏ ஏ.        
    

24

எப்படிநான் திட்டி னாலும்
        ஏளனம் செய்யப் பார்க்கிறாய்
    சொற்படிநீ போகா விட்டால்நான்
        செருப்படி கொடுத்தி டுவேன்
    வாதுசெய் யாதேடா
        வந்தவழி போய்ச் சேரடா
                    சேரடா ஆ ஆ.

25

மரியாதையாய்ப் போய்விடடா
        மானங் கெட்ட மடப்பயலே
    தெருத்தெருவாய்த் திரிந்த நாயே
        திரும்பிப்பார்க் காமே ஓடடா
    வாதுசெய் யாதேடா
        வந்தவழி போய்ச்சேரடா
                    சேரடா ஆ ஆ.         
      

26

 ஆத்துக்குப் போன அண்ணன்மார்
        அமளி வந்து செய்யாமே
    அமைதி யாய்நீ போய்விடடா
        அடிதப் பாமல் கிடைக்குமடா