வ
வாதுசெய் யாதேடா
வந்தவழி போய்ச்சேரடா
சேரடா
ஆ ஆ.
27
அண்ணன்மார் இங்கே வந்து
அமளிஏதும் செய்தால்நான்
அத்தாசமா உன்னைத் தூக்கி
ஆகாசமாய்ப் பறந்திடுவேன்
அன்னமே பொன்னம்மா
கண்ணி ரண்டும்
சோருதடி
அன்னமே
ஏ ஏ.
28
அத்தாசமா என்னைத் தூக்கி
ஆகாசமாப் பறந்தா
யிண்ணா
பூமிக் குள்ளே நான்நுழைந்து
புல்லா முளைத்திடுவேன்
வாதுசெய் யாதேடா
வந்தவழி போய்ச்சேரடா
சேரடா
ஆ ஆ.
29
பூமிக்குள்ளே நீநுழைந்து
புல்லா முளைச்சை யிண்ணா
காராம்பசு வேசங்கொண்டு
கரும்பிடுவேன் அந்தப்புல்லை
அன்னமே பொன்னம்மா
கண்ணி ரண்டும்
சோருதடி
அன்னமே
ஏ ஏ.
30
காராம் பசுவா நீவந்து
கரும்பினாலும் அந்தப்
புல்லை
ஊர்க்குருவி வேசங் கொண்டு
உயரப் பறந்திடுவேன்
வாதுசெய் யாதேடா
வந்தவழி போய்ச்சேரடா
சேரடா
ஆ ஆ.
31
|