பக்கம் எண் :

ஊர

68

மலையருவி

ஊர்க்குருவி வேசங் கொண்டு
        உயரப் பறந்தியிண்ணாச்
    செம்பருந்து வேசங்கொண்டு
        செந்தூக்காத் தூக்கிடுவேன்
    அன்னமே பொன்னம்மா
        கண்ணி ரண்டும்சோருதடி
                    அன்னமே ஏ ஏ.
                

32

வேணாமடி வாதும் வம்பும்
        சோராமலே நீயும் நானும்
    தாராளமாத் தாலி கட்டி
        வாழ லாண்டி வருச மெல்லாம்
    அன்னமே பொன்னம்மா
        கண்ணிரண்டும் சோருதடி
                        அன்னமே ஏ ஏ.   
             

33

வார்த்தை சண்டை

சாணிக்கூ டையை எடுத்துக் - குட்டி
        சாணிவாரப் போற பெண்ணே
    சந்து பொந்திலே பாரடிநீ - குட்டி
        பந்து பந்தாக் கிடக்கும் சாணி.
   

1

மாடுமேய்க்கும் மாட்டுக் காரா - பையா
        வீடு வீடாய்த் தின்னும் பையா
    போடா சோலியைப் பார்த்துக் கிட்டுக்
        கோளா றொண்ணும் சொல்லா தேடா. 
            

2

எருமைச் சாணி யைஎ டுத்துக் - குட்டி
        எருவு தட்டப் போறவளே
    எடுத்தெ றிஞ்சு பேசா தேடி - குட்டி
        எருமை மாட்டுத் தொண்டைக் காரி.
       

3

அதைப் புனக்கு ஏறிப் போச்சோ - பையா
        அக்ரமும் மிஞ்சிப் போச்சோ
    அடக்கு றேண்டாஉன் ஆணவத்தைப் - பையா

        அடக்கி வையடா உன்நாக்கை.
                           

4