பக்கம் எண் :

58காத்தவராயன் கதைப்பாடல்

ஆண்டியுட சாபமதால் மாலையரை சிறையெடுக்க
   அரனார் சாபம்
 
வேண்டியுடன் மணமுடித்தேன் வேதியர்கள்சபையில்
   விரைந்து சென்று
 
தாண்டி முறை கேட்டசனம் எந்தனுக்குக் கழுவேற
   தயவு செய்தார்
 
தூண்டிகொண்டு ஆசாரி எந்தனுக்கு மிடரிருக்க
   சூட்டுவாயே
 
 
சூட்டிடவே வாருமென்று சூரனவர் தானழைக்க
மாட்டிடவே வாருமென்று மகறாசன் தானழைக்க
 
ஆசாரியான் தொழிலாளர் அனைவோரும் வாழ்கவென்று
ராசனவர் ஆரியப்பன் நாட்டிலுள்ளோர் தான்வாழ்க
 
எல்லோரும் வாழியென இறையோனருள் பெறவே
நல்லோரும் வாழ்க நாடுதழைக்க வென்று
 
தொங்குகின்ற தூண்டிதனை தூய்யோனிடத்தில் வைத்து
அங்குமந்தச் செங்கல்தனை அடுக்கி யிருப்பதனை
 
தம்முடைய காலாலே தள்ளி அப்புறத்தே
 
அண்ணாந்த பார்வையோ ஆதிசிவன் சொற்படியோ
நின்றாரே காத்தவனார் நேராய்க் கழுமுனையில்
 
மழுதனை ஏந்துங்கையால் மாதங்கி தவத்தினாலே
பழுதறப் பாரிலேதான் பாங்குடன் மாலைதன்னை
 
தொழுதிட சிறையெடுத்து துண்டியின் இடத்தில் வைத்து
கழுதனில் வீற்றிருந்தான் காத்தவ ராயன்தானே
 
கழுவில் இருப்பதனை கண்டந்த மானிடர்கள்
அழுத கண்ணோடு அவர்கள் புலம்பிடவே
 
பார்த்த பேரெல்லாம் பாபமி தென்று சொல்லி
ஏத்த பேரெல்லாம் இதுபுதுமை யென்றுசொல்லி
 
கண்ட பேரெல்லாம் கண்ணீர் சொரிந்தடவே
அண்டையிலே நின்றவர்கள் எல்லோரும் போனார்கள்