|
| ஆண்டியுட சாபமதால் மாலையரை சிறையெடுக்க |
| அரனார் சாபம் |
| |
| வேண்டியுடன் மணமுடித்தேன் வேதியர்கள்சபையில் |
| விரைந்து சென்று |
| |
| தாண்டி முறை கேட்டசனம் எந்தனுக்குக் கழுவேற |
| தயவு செய்தார் |
| |
| தூண்டிகொண்டு ஆசாரி எந்தனுக்கு மிடரிருக்க |
| சூட்டுவாயே |
| |
| |
| சூட்டிடவே வாருமென்று சூரனவர் தானழைக்க |
| மாட்டிடவே வாருமென்று மகறாசன் தானழைக்க |
| |
| ஆசாரியான் தொழிலாளர் அனைவோரும் வாழ்கவென்று |
| ராசனவர் ஆரியப்பன் நாட்டிலுள்ளோர் தான்வாழ்க |
| |
| எல்லோரும் வாழியென இறையோனருள் பெறவே |
| நல்லோரும் வாழ்க நாடுதழைக்க வென்று |
| |
| தொங்குகின்ற தூண்டிதனை தூய்யோனிடத்தில் வைத்து |
| அங்குமந்தச் செங்கல்தனை அடுக்கி யிருப்பதனை |
| |
| தம்முடைய காலாலே தள்ளி அப்புறத்தே |
| |
| அண்ணாந்த பார்வையோ ஆதிசிவன் சொற்படியோ |
| நின்றாரே காத்தவனார் நேராய்க் கழுமுனையில் |
| |
| மழுதனை ஏந்துங்கையால் மாதங்கி தவத்தினாலே |
| பழுதறப் பாரிலேதான் பாங்குடன் மாலைதன்னை |
| |
| தொழுதிட சிறையெடுத்து துண்டியின் இடத்தில் வைத்து |
| கழுதனில் வீற்றிருந்தான் காத்தவ ராயன்தானே |
| |
| கழுவில் இருப்பதனை கண்டந்த மானிடர்கள் |
| அழுத கண்ணோடு அவர்கள் புலம்பிடவே |
| |
| பார்த்த பேரெல்லாம் பாபமி தென்று சொல்லி |
| ஏத்த பேரெல்லாம் இதுபுதுமை யென்றுசொல்லி |
| |
| கண்ட பேரெல்லாம் கண்ணீர் சொரிந்தடவே |
| அண்டையிலே நின்றவர்கள் எல்லோரும் போனார்கள் |