|
இப்படி மூன்று நாளும் |
இயல்புடன் இருக்கக் கண்டு |
சொற்படி முன்னால் வந்த |
தோகையும் நல்ல தங்காள் |
|
நெல்படி தானும் வாங்கி |
நேர்மையாய் மோரு கொண்டு |
கல்பிழை யாகப் போக |
காத்தவ ராயன் கண்டார். |
|
இடையர் குலந்தனிலே இயல்பான நல்ல தங்காள் |
நடையழகி யாகியதோர் நல்லதங்காள் மோரு கொண்டு |
|
போவதையும் கண்டு புகழ்பெரிய காத்தவனார் |
ஏவியே மந்திரத்தை இயல்பான கன்னியிடம் |
|
மந்திரமென்னும் வலையை அவள்மேல் வீசிடவே |
அந்தரத்தின் மேலிருந்து அழைத்தாரே கைகாட்டி |
|
கண்டு மதிமயங்கி கன்னியவள் நல்லதங்காள் |
அண்டிக் கழுவடியில் அண்ணாவே என்னரசே |
|
இந்தக் கழுமுனையில் இருந்துமக அண்ணாவே |
அந்த முடனென்னை அழைத்த விபரமென்ன |
|
சொல்லுகிறேன் தங்கையரே தோகையரே மேல்பிறப்பே |
தெள்ளமையால் மாலையரை சேர்ந்து கழுவிருந்தேன் |
|
இருக்கிறேன் தங்கையரே எந்தனுக்குத் தாகமது |
பொறுக்கவில்லை எந்தனுக்கு பெருந்தாக மேதணிய |
|
அடிமேல டியைவைத்து படிமேலே காலைவைத்து |
துடியாக மோர்கொடம்மா தோகையரே என்பிறப்பே |
|
காத்தவனார் சொல்ல கன்னியவள் நல்லதங்காள் |
ஏத்தமுள்ள அண்ணாவே இந்தாரும் ஏறுகிறேனென்றாள் |
|
பருத்தமுடன் நல்லதங்காள் பரிவுடனே மோர்கொடுக்க |
பரிமண முந்தான் |
|
சித்தமுடன் மோருண்டு களைதீர்ந்து இளைப்பாறி |
உயிர்தெளிந்து சொல்வார் |