|
அத்தருடன் இந்நெறியது உரைப்பேன் தோகையரே |
அருளக் கேளும் |
|
புத்தியுடன் மனைக்கேகு என்று சொல்ல மங்கையரும் |
போயினாளே. |
|
பானைநிறைய நெல்லாய் பலநெல்லாய் உண்டுபண்ணி |
மானிளையைப் பார்த்து வாழ்த்துகிறார் காத்தவனார் |
|
மோர்கொடுத்த நல்லதங்காள் முத்தியது பெற்றிருக்க |
பால்கொடுத்த நல்லதங்காள் பாக்கியங்கள் பெற்றிருக்க |
|
தாகம் தணித்தவர்கள் சந்நிதியுங் பெற்றிருக்க |
தாகம் தணிந்ததுபோல் அவர்கள் மிகவாழ்க |
|
மாடு பெருகிவர மனைவி மக்களுண்டாக |
ஆடு பெருகிவர அழிவில்லாச் செல்வமது |
|
பட்டி பெருகிவர பாக்கியங்கள் உண்டாக |
கட்டுக் குலையாமல் காலியது பெருகிவர |
|
வாக்குப் பலிக்குமென்று வாழ்த்தினார் காத்தவனார் |
பாக்கிய லஷ்மியும் பகுந்து குடியிருக்க |
|
போனாள்காண் நல்லதங்காள் போய்புகுந்தாள் தன்வீடு |
மானாளும் போனவுடனே மங்கை அவள்தனக்கு |
|
அங்கமெலாம் நொந்து ஆக மனதெழும்பி |
தங்கப் பரிமணமும் தானிருக்கும் வாரதுபோல் |
|
அங்கு கழுப்போல அவளிருந்தாள் அம்மானை |
|
நாடறியக் காத்தவனார் |
ஞாலமதில் கழுவிருக்க |
நவிலும் சொர்க்கம் |
|
தேடறிய பன்னிருவர் |
சித்தர்களும் திரண்டுவந்து |
சிறந்து பார்த்து |