|
| அத்தருடன் இந்நெறியது உரைப்பேன் தோகையரே |
| அருளக் கேளும் |
| |
| புத்தியுடன் மனைக்கேகு என்று சொல்ல மங்கையரும் |
| போயினாளே. |
| |
| பானைநிறைய நெல்லாய் பலநெல்லாய் உண்டுபண்ணி |
| மானிளையைப் பார்த்து வாழ்த்துகிறார் காத்தவனார் |
| |
| மோர்கொடுத்த நல்லதங்காள் முத்தியது பெற்றிருக்க |
| பால்கொடுத்த நல்லதங்காள் பாக்கியங்கள் பெற்றிருக்க |
| |
| தாகம் தணித்தவர்கள் சந்நிதியுங் பெற்றிருக்க |
| தாகம் தணிந்ததுபோல் அவர்கள் மிகவாழ்க |
| |
| மாடு பெருகிவர மனைவி மக்களுண்டாக |
| ஆடு பெருகிவர அழிவில்லாச் செல்வமது |
| |
| பட்டி பெருகிவர பாக்கியங்கள் உண்டாக |
| கட்டுக் குலையாமல் காலியது பெருகிவர |
| |
| வாக்குப் பலிக்குமென்று வாழ்த்தினார் காத்தவனார் |
| பாக்கிய லஷ்மியும் பகுந்து குடியிருக்க |
| |
| போனாள்காண் நல்லதங்காள் போய்புகுந்தாள் தன்வீடு |
| மானாளும் போனவுடனே மங்கை அவள்தனக்கு |
| |
| அங்கமெலாம் நொந்து ஆக மனதெழும்பி |
| தங்கப் பரிமணமும் தானிருக்கும் வாரதுபோல் |
| |
| அங்கு கழுப்போல அவளிருந்தாள் அம்மானை |
| |
| நாடறியக் காத்தவனார் |
| ஞாலமதில் கழுவிருக்க |
| நவிலும் சொர்க்கம் |
| |
| தேடறிய பன்னிருவர் |
| சித்தர்களும் திரண்டுவந்து |
| சிறந்து பார்த்து |