|
ஆடறிய பரிமளத்தை |
உயிர்பிடித்துப் போவமென்று |
அருமை யான |
|
லாடர்களும் கழுவடியில் |
சுற்றிவந்து கழுவடியை |
நாடினாரே. |
|
உயிரைப் பிடிக்கவென்று ஓடிவந்த லாடர்களை |
மயிரில் துரட்டிகொண்டு மாட்டி யிழுப்பதேபோல் |
|
தம்முடைய மந்திரத்தால் சகலமுனி லாடர்களை |
அவ்விடம் விட்டேகாமல் அமர்த்தினார் காத்தவனார் |
|
செய்து மிருக்கையிலே தேசிமடம் தானேறி |
பொன்சட்டை தான் தரித்து பொன்னால் தடியதுவும் |
|
கத்தியும் கட்டாரியும் கனமான ஆயுதமும் |
வெற்றியுடன் வெண்புரவி மேலேறி ஆரியனும் |
|
காரியமாய் தானென்று கைகாட்டிக் காத்தவனார் |
ஆரியனே வாருமென்று அவனைமிக ஏதுரைப்பார் |
பாரில் நல்ல தூண்டியிலே படுந்துயரம் தீர்ந்திருக்க |
|
கத்தியால் தானே கழுத்தறவே வீசுமென்றார் |
மெத்தெனவே கேட்டு வீசினார் ஆரியனும் |
|
கத்தி கழுத்தில்விழ காமாக்ஷி நாயகியும் |
அத்தருடனே வந்து அழகான கழுவடியில் |
|
காத்தவனார் கழுவேற ஆரியன்தான் |
கழுத்தறவே வீசிடவே மாலையாக |
போற்றியே புகன்றிடவும் கண்டுதேவர் |
புரந்தரனார் விடையேற்றி பூவையாளும் |
|
தோத்தரித்துக் கழுவிருக்கம் பரிமணத்தை |
தூக்கியிரு கரத்தாலே மடிமேல் |
வைத்தகற்றி இச்சடலம் விட்டுநீயும் |
ஆயிழையா ரெழுவருடன் வருகுவாயே. |
|
கன்னியர்கள் தனைக்கூட்டி வாருமென்று |
காமாக்ஷி புகன்றிடவே காத்தான் தானும் |
உன்னிதமாய் ஆரியனைக் கழுவிலேற்றி |
உந்தனுக்குமுன் ஊட்டிப் புசிப்பே னென்று |