|
| ஆடறிய பரிமளத்தை |
| உயிர்பிடித்துப் போவமென்று |
| அருமை யான |
| |
| லாடர்களும் கழுவடியில் |
| சுற்றிவந்து கழுவடியை |
| நாடினாரே. |
| |
| உயிரைப் பிடிக்கவென்று ஓடிவந்த லாடர்களை |
| மயிரில் துரட்டிகொண்டு மாட்டி யிழுப்பதேபோல் |
| |
| தம்முடைய மந்திரத்தால் சகலமுனி லாடர்களை |
| அவ்விடம் விட்டேகாமல் அமர்த்தினார் காத்தவனார் |
| |
| செய்து மிருக்கையிலே தேசிமடம் தானேறி |
| பொன்சட்டை தான் தரித்து பொன்னால் தடியதுவும் |
| |
| கத்தியும் கட்டாரியும் கனமான ஆயுதமும் |
| வெற்றியுடன் வெண்புரவி மேலேறி ஆரியனும் |
| |
| காரியமாய் தானென்று கைகாட்டிக் காத்தவனார் |
| ஆரியனே வாருமென்று அவனைமிக ஏதுரைப்பார் |
| பாரில் நல்ல தூண்டியிலே படுந்துயரம் தீர்ந்திருக்க |
| |
| கத்தியால் தானே கழுத்தறவே வீசுமென்றார் |
| மெத்தெனவே கேட்டு வீசினார் ஆரியனும் |
| |
| கத்தி கழுத்தில்விழ காமாக்ஷி நாயகியும் |
| அத்தருடனே வந்து அழகான கழுவடியில் |
| |
| காத்தவனார் கழுவேற ஆரியன்தான் |
| கழுத்தறவே வீசிடவே மாலையாக |
| போற்றியே புகன்றிடவும் கண்டுதேவர் |
| புரந்தரனார் விடையேற்றி பூவையாளும் |
| |
| தோத்தரித்துக் கழுவிருக்கம் பரிமணத்தை |
| தூக்கியிரு கரத்தாலே மடிமேல் |
| வைத்தகற்றி இச்சடலம் விட்டுநீயும் |
| ஆயிழையா ரெழுவருடன் வருகுவாயே. |
| |
| கன்னியர்கள் தனைக்கூட்டி வாருமென்று |
| காமாக்ஷி புகன்றிடவே காத்தான் தானும் |
| உன்னிதமாய் ஆரியனைக் கழுவிலேற்றி |
| உந்தனுக்குமுன் ஊட்டிப் புசிப்பே னென்று |