|
| மென்னியையே பிடிக்கவந்த லாடர்தன்னை |
| வாருமென்று சடத்தை மறித்துப் போட்டு |
| நன்னியே மோர்கொடுத்த நல்லதங்காள் |
| தனையழைத்து மாலையிடம் நடந்தாரையன். |
| |
| காத்தவனார் மாலைசென்று பாரில் புக்கி |
| கனிவுடனே நடந்தவகை யெல்லாம் சொல்லி |
| நேத்தியாய் சடலமதை மறித்துப் போட்டு |
| நிமிஷம்வர வேணுமென்று ஐயர்கூற |
| |
| வாழ்த்தியே கூடதனை விட்டு மாலை |
| வயிரசெடடி மகளுடனே வந்து சேர |
| பூத்த பூவாயி சவுதாயி நல்லி |
| புகழ்கருப்பாயி எழுவருடன் புக்கி னாரே. |
| |
| அரனார் உமையாளும் அன்பாய் விடைகொடுக்க |
| திறமான ஆரியனை சிறந்தகழு மேலேற்றி |
| |
| வரமும் அவர்களுக்கு வாக்கும் கொடுத்தருளி |
| தரமுடைய லாடர்களை சகலகன்னி மாடர்களுடன் |
| |
| இச்சடலம் விட்டு இயல்பான தேவதையை |
| மெய்ச்சடலம் விட்டு வெளிப்பட்டார் அம்மானை |
| |
| சட்டை முறித்து வைத்து சர்ப்பம் நடப்பதுபோல் |
| இட்டமுடன் சிப்பிதனில் இருந்ததொரு முத்துதனை |
| |
| திட்டமுடன் சங்கதனில் சேர்த்துப் பதிப்பதுபோல் |
| விதையதனை எடுத்து நடுவது போலாக |
| |
| ஊத்தைச் சடலமதை ஒளித்துப் புவிதனிலே |
| காத்தானும் தன்னுடலை சுழித்தாரே பாரதனில் |
| |
| தூலத் தடக்கி சூருமதில் உள்ளடக்கி |
| காலத்தைப் போக்கி கழித்தார் உடலுமதை |
| |
| பத்திர காளியுடன் பார முனித்திரனும் |
| உத்தமனாய் சென்று உகந்திருந்தார் பச்சமலை |