பக்கம் எண் :

62காத்தவராயன் கதைப்பாடல்

மென்னியையே பிடிக்கவந்த லாடர்தன்னை
   வாருமென்று சடத்தை மறித்துப் போட்டு
நன்னியே மோர்கொடுத்த நல்லதங்காள்
   தனையழைத்து மாலையிடம் நடந்தாரையன்.
 
காத்தவனார் மாலைசென்று பாரில் புக்கி
   கனிவுடனே நடந்தவகை யெல்லாம் சொல்லி
நேத்தியாய் சடலமதை மறித்துப் போட்டு
   நிமிஷம்வர வேணுமென்று ஐயர்கூற
 
வாழ்த்தியே கூடதனை விட்டு மாலை
   வயிரசெடடி மகளுடனே வந்து சேர
பூத்த பூவாயி சவுதாயி நல்லி
   புகழ்கருப்பாயி எழுவருடன் புக்கி னாரே.
 
அரனார் உமையாளும் அன்பாய் விடைகொடுக்க
திறமான ஆரியனை சிறந்தகழு மேலேற்றி
 
வரமும் அவர்களுக்கு வாக்கும் கொடுத்தருளி
தரமுடைய லாடர்களை சகலகன்னி மாடர்களுடன்
 
இச்சடலம் விட்டு இயல்பான தேவதையை
மெய்ச்சடலம் விட்டு வெளிப்பட்டார் அம்மானை
 
சட்டை முறித்து வைத்து சர்ப்பம் நடப்பதுபோல்
இட்டமுடன் சிப்பிதனில் இருந்ததொரு முத்துதனை
 
திட்டமுடன் சங்கதனில் சேர்த்துப் பதிப்பதுபோல்
விதையதனை எடுத்து நடுவது போலாக
 
ஊத்தைச் சடலமதை ஒளித்துப் புவிதனிலே
காத்தானும் தன்னுடலை சுழித்தாரே பாரதனில்
 
தூலத் தடக்கி சூருமதில் உள்ளடக்கி
காலத்தைப் போக்கி கழித்தார் உடலுமதை
 
பத்திர காளியுடன் பார முனித்திரனும்
உத்தமனாய் சென்று உகந்திருந்தார் பச்சமலை