| |
பட்டன்
: |
| |
இந்தஉறுதியுஞ்
சந்தோஷஞ் சொன்னாலுங் கேளேன்
இஷ்டமாக கூடுடுயிருக்க இது நல்லநாளே |
| |
பெண்கள்
: |
| |
வந்தசகுனமோ
அக்காள்இ வனா ருகேளு
மடியைப்பிடிக்க வருகிறான் பாவி சண்டாளன்,
சாம்ப சிவநாதர் போலிருக்கிறீர் சுவாமி
சக்கிலிச்சி நாங்கள் தீண்டப்பொறுக்குமோ - பூமி
|
| |
பட்டன்
: |
| |
ஆண்டவன்
செயலினாலுந்தனை பெற்றாளே - மாமி
அல்லாமல் வேறில்லை தாகந்தணிந்திட - நேமி
சொந்தமாகவே வந்தேன் மையியலைத்தீரு. |
|
|
பெண்கள்
: |
| |
சுவாமி
பொதிகாசல முண்டு கார்ப்பார்
விந்தையாய் பேசுறானே எங்களைக் காரு
வெட்டிடு வானென்தகப்பன் இதோ உன்னைபாரு. |
|
பட்டன்
: |
| |
நாக்கை
சுயழற்றுது உள்வாய்யுளறுது பெண்ணே
நன்மையுண்டு கையால் தண்ணீரு தந்திடு கண்ணே |
| |
பெண்கள்
:
|
| |
கன்றுக்கிரங்கும்
பசுபோ லலைகிறீர் சுவாமி,
இது காரியமல்ல வந்தவழி போம் சொன்னேன்.
அப்பன் பசியோடே தேடியிருப்பானே யெங்களை,
அப்புறம் தூரவிலகிடும் போறோம் நாங்களே. |
| |
பட்டன்
: |
| |
ஒப்புடன்
கூடியிருக்கலாஞ் சக்கிலிப் பெண்களே
ஓடிப்போனா லெந்தன்தோஷம் விடாதடி உங்களை |
| |
பெண்கள்
: |
| |
பொழுது
உயர்ந்து வெகுநேரமாகுது பொம்மக்கா
போகவொட்டாமலே நம்மை மறிக்கிறான் திம்மக்கா
மறித்துமே பெண்களை முந்தியே எட்டிப் பிடிக்கிறான்
மையல் பொறுக்காமல் மன்மதபாணந் துடிக்கிறான் |