| |
தமையன்மாரை
சந்தித்து பட்டன் தன்விருப்பத்தைக் கூறல்
வேறு |
| |
ஆகட்டுமென்று
நடந்து விக்ரமசிங்க அக்கிராகரபதில்
அண்ணன்மார்வந்து இறங்கியிருக்கும் அகரத்தை29
வந்துகண்டார்
கண்டவுடனே “என் அண்ணரே ஊருக்குக் காலமே நீங்கள் போங்கோ
கலியாணம் பண்ணவே போகிறேன் வாலப்பகடையுட மக்களை
சக்கிலியனுடைய சாதியிலே போய்த் தாலிகட்டப் போகிறேன்”
தமயன்மாரே நீங்கள் ஊருக்குபோங்கோ தாமதிக்க வேண்டாம். |
| |
தமையன்கள்
பட்டனைக் கல்லறையில் அடைத்தல் |
| |
அந்தமொழி
கேட்க தம்பிக்கு ஞானப்பைத்தியமென்று சொல்லி
அகரத்துக் கல்லறைக்குள்ளே பிடித்து அடைத்தாரே பட்டனைத் தான்.
|
| |
பட்டன்
தப்பியோடல் |
| |
அடைத்துக்கிடக்க
அவதி வந்ததென்று அலறி அபயமிட
அறைக்கதவும் படீரென்று திறக்க வெளியில் வந்துவிட்டான். |
|
|
பகடையின்
நிபந்தனைகளை பட்டன் நிறைவேற்றல் |
| |
விக்கிரமசிங்கபுரத்து
சந்தையில் தோல் வேண்டியபடியறுத்து
விநோதமாகச் செருப்பு கட்டிக்கொண்டு வீதி வழிநடந்தான்.
நடுவழியில் பின் குடும்பியும்30 பூனூலும் நன்றாகிவேயறுத்து
நாலு திசைக்கு மெறிந்து விட்டு பட்டன் நடந்தான் பசுக் கிடைக்கு
ஆலம்பட்டி கிடைதனிலே வாலப்பகடையுட குடிசையிலே
அழகு செருப்பை நடையிலே தூக்கி விட்டப்புறம் போயிருந்தான். |
| |
பட்டனைப்
பகடை காணல் |
| |
பொழுது
பறைந்தபின் கிடைகளைவிட்டு புகுந்தான் குடிலுக் குள்ளே
பொடுக்கென்று நெற்றியிலே செருப்புப்புட்டி அத்து31 விழுந்திடுமாம்
விழுந்த செருப்பையெடுத்து குடிசை வெளிச்சத்தில் கொண்டு போய்
மேலும் கீழும் பார்த்து தலையிலடித்து விதிவசமென்று சொன்னான்.
வாருங் குடிசைக்குள் மருமகனே, என்றான் ! வத்து புகுந்திருந்தான்
வரிசையுடனே மருமகனுக்கு வட்டப் பலகை யிட்டான் |
|
பகடையின்
பெண்களுக்கும் பட்டனுக்கும் திருமணம்
நடைபெறுதல் |
| |
இருந்தவுடனே
அழகனைக்கண்டு இருதோளும் பூரித்து
என்மகளுக்கு கலியாணமென்று ஊர்முறைக்காளனுப்பி |