பக்கம் எண் :

முத்துப்பட்டன்
வில்லுப்பாட்டு
49


குறிப்புகள்

1. அத்திமுகன் - யானை முகத்தோன் கணபதி பக்கம் 31
     
2. நாடதிலே - தென்காசிக்கு மேற்கும் சங்கரன்
கோயிலுக்குத் தெற்கும் உள்ள பகுதி.
பக்கம் 31
     
3. லிங்கப்பட்டன் - அண்ணன் பட்டன் முதல்
சோமலிங்கப் பட்டன்வரை முத்துப்பட்டனின்
தமையன்களின் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன.
பக்கம் 31
     
4. ஏத்தன் - ஏற்றன், உயர்ந்தவன் பக்கம் 31
     
5. மல்லடவு - மல்வித்தை பக்கம் 31
     
6. வஸ்துவகை - சொத்து வகை (வஸ்து - நாஞ்சில்
நாட்டில் சொத்து என்ற பெயரில் வழங்கி வருகிறது.
பக்கம் 31
     
7. சுனை - புண்ணிய தீர்த்தம் பக்கம் 32
   

8. எத்தரிய - புகழ்ச்சிக்குரிய பக்கம் 32
     
9. மனுவெழுது - உடலுழைப்பைவிட, எழுத்தாணி
கொண்டு எழுதிப் பிழைப்பது உயர்ந்தது என்ற
எண்ணம் தோன்றிய மனுவெழுதினால் 4000 பொன்
சம்பளம் பெறலாம் என்ற காலத்தில் நம்பிக்கை
இருந்தது.
பக்கம் 32
     
10. சோதிமுத்து - முத்துப்பட்டன் பக்கம் 33
     
11. சாளியல் சாளியலாய் - குவியல் குவியலாய் (நாஞ்சில
நாட்டு வழக்கு)
பக்கம் 33
     
12. திருவாரியன் - ஆரியங்காவு என்னும் ஊரிலுள்ள
கோவிலின் சிவலிங்கம்.
பக்கம் 34