பக்கம் எண் :

292அண்ணன்மார் சுவாமி கதை

வேப்பிலைக் கொம்பன் வெகுபலமுள்ள பன்றியது
இந்த நல்ல பன்றியது எங்களுட சீமையிலே
செந்நெல் கதிர்களெல்லாம் தின்றழித்துப் பன்றியது
வாழை கரும்பு மஞ்சள் வகையான சோலையெல்லாம்
அழித்துமே பன்றியது அதம்பண்ணி வருகுதய்யா

என்று குடியானவர் இதமாகச் சொல்லியேதான்
எங்கள் குறைகளை நீங்கள் இதமுடனே தீர்க்கவேணும்
என்று பாதம் பணிந்தார்கள் பாங்கான பேர்களெல்லாம்
சித்தம் திரும்பியேதான் ராஜா திருவாக்கு ஏது சொல்வார்
எண்ணம் கலங்க வேண்டாம் யோசனைகள் செய்யவேண்டாம்
வாளெடுத்த பேரை வரவழைத்துக் கூட்டிவந்து
நம்மளுட சீமை மேல் காவல் ரட்சகனாய் வைக்கிறேன் நான்
ஏதுக்கும் மலைக்கவேண்டாம் யோசனைகள் செய்யவேண்டாம்
என்று முத்தான வாய்திறந்து (ராஜா) உத்தரவு செய்தாரே
ஆடை அலங்கரித்து அவர்களுக்கு ஆபரணம் பூட்டியேதான்

வேண்டும் வெகுமதிகள் மெத்தவே தான்கொடுத்தார்
அப்போது குடியானவர் அடிவணங்கித் தெண்டனிட்டு
வணங்கிப் பணிகள் செய்து வணக்கமுடன் நிற்கையிலே
சித்தம் திரும்பி ராஜா திருவாக்குச் சொல்லுகிறார்
ஏதுக்கும் அஞ்சவேண்டாம் யோசனைகள் செய்யவேண்டாம்

உங்கள் ஊரு போய்ச் சேருமென்று உத்தரவு செய்தாரப்போ
அப்பனைகள் செய்த பின்பு குடியானவர் எல்லோரும் வாரார்கள்
அப்போ வாசல் பிரதானியை வரவழைத்து ஏதுசொல்வார்
வாசல் பிரதானியை அழைத்து வரச் சொன்னது
சொல்லுகிறாரப்போது சோதிமணிவாய்திறந்து
மேற்கே மதுக்கரை நம்ம மேலான ராச்சியமும்