என்றே சிவசோழர் எழுதிய உத்திரந்தான் என்றுமே அண்ணர்சொல்ல ஏதுசொல்வார் தம்பிசங்கு சீமை காவல் கொள்கிறோமென்று ஓலை சீக்கிரமாய் எழுதுமண்ணா ஓலை எழுதாவிட்டால் அவனை யொருநொடியில் வெட்டிடுவேன் என்று தம்பி சங்கர் சொல்ல ஏதுசொல்வார் அண்ணருந்தான் வாராய் இளவரசே வாள்வீரா தம்பிசங்கு நீ சொல்லுகிற வார்த்தை துஷ்டத்தனமான வார்த்தை சோழர் துரைத்தனம் செய்கிறவர் நாம் குடித்தனம் செய்கிறவர் இவரைப் பார்க்காது போனாலும் அவரை நாம் பார்க்கவேணும் அதனால் வெட்டுகிறேனென்று சொன்ன வீரியத்தை விட்டுவிடு அண்ணரும் சொல்லையிலே சங்கரும் அன்பாய் மனமகிழ்ந்து வாசல் பிரதானியை வகையாய் விசாரித்து அனுப்புயுமே வையுமென்று சங்கர் அன்புடனே சொல்லையிலே தங்காள் பிறவியரைத் தான்கேட்போம் என்று எண்ணி வாராய் இளவரசி வாள்வீரன் தங்கையரே உத்தமா பத்தினியே ஒருசொல்லு வாசகியே வேதப்பிராமணியே வெள்ளாளன் பிறந்தவளே பத்தினியாள் கண்டகனா அம்மா பழுதொருநாள் போகாது காரிழையாள் கண்டகனா எனக்கு கைமேல் பலித்ததிப்போ உத்தமியாள் கண்டகனா எனக்கு உள்ளபடி ஆச்சுதிப்போ சிவசோழர் வாசல் பிரதானி வந்துவிட்டார் நம்மைத்தேடி வாசல் பிரதானியை வகையாய் விசாரித்தனுப்பவேணும் போசனங்கள் விசாரியும் பொன் போன்ற பிறவியரே | | |
|
|