அப்படி அடிவிட்டு ஓடச் சொன்னால் ஆருக்கும் ஏற்காது உன் குதிரை முன்தாவி ஒரு காலும் பின்தாவி ஒருகாலும் சரியாக நின்றிடுவோம் சமர்த்து மேல் ஓடிடுவோம் முன்காலொருகாலும் பின்காலொருகாலும் முன்தட்டு ஒருகையிலே குதிரை பின்தட்டு ஒரு கையிலே சரியாக நின்றுமப்போ சோழரைத்தான் ஓடும் என்று சொன்னார் பட்டாணிச் சாவுக்கெடுத்து சோழர்விட்டார் புரவியைத்தான் காலாலே தட்டிவிட்டார் பொன்னர் ஆலப்போலே பறந்து ஆலாப்போலே பறந்து அதிதுருசாய் ஓடிவந்து வாழை மரத்திலேதான் வகையான பொட்டுமிட்டு அங்கிருக்கும் பேர்களைத்தான் அனைவரையும் சாட்சிவைத்து எதிராக வந்து நின்று சோழரைப்பார்த்து ஏதுசொல்வார் பொன்னருமே உன் உத்தமாதேசி வர இந்நேரம் சோலி என்ன கட்டை தடுக்கியதோ கல்லணை சரிந்திட்டதோ முட்டி தடுக்கியதோ உன் குதிரைக்கு முன்வாகை அந்திடுச்சோ இடறி விழுந்திட்டதோ உன் குதிரை இளமணலில் பாய்ந்திட்டதோ உன்குதிரை வருவதற்கே இன்னேரம் சோலி என்ன அந்த மொழி சொல்ல ராஜகுமாரன் அப்போது ஏது சொல்வார் வாருமினி நல்ல பொன்னு உன் வார்த்தைக்கு நான் என்ன சொல்வேன்? மேகம் பறந்தாலும் வெகு தூரம் நான் பறப்பேன் காகம் பறந்தாலும் கருதியே நான் பறப்பேன் காகத்திலுங்கடுசு உன்னைக் கண்ணாலே காண்கிலையே | | |
|
|