பொன்னேணி வழியாக தெய்வகன்னிகள் நூலேணி வந்திறங்கி நூலேணி வழியாக கன்னியர்கள் பூலோகம் வந்திறங்கி பட்ட படுகளத்தில் குமாரசங்கருட பாரக்குலகளத்தில் சென்ன குலகளத்தில் தெய்வகன்னிகள் சேரவே வந்து நின்று அண்ணருட தங்கையரைக் கன்னியர்கள் அருகில் வரவழைத்து வாக்கு மனுவையெல்லாம் நல்லதங்கம் வாங்கிவந்தோம் உத்தமியே அந்த மொழிகள் சொல்ல உத்தமி அப்போ மனங்குளிர்ந்து சிவனைத் தொழுது ஸ்ரீராமரைத்தானினைந்து வாக்கு மனுவையெல்லாம் உத்தமி வாங்கி மடியில் வைத்து நெற்றியிலே பட்ட அம்பு சங்கருக்கு நேராகப் பாய்ந்த தைத்தான் கட்டியிலை பிடித்து உத்தமியாள் காயம் பொருதுகிறாள் பொன்னூசி பொன்சரடு கோர்த்து பொருதுகிறாள் காயத்தை கட்டியிலை பிடித்து அண்ணருக்கு காயம் பொருதியேதான் சுவாமியுட வாடாத் திருமாலை சங்கருட வாங்கழுத்தில் சூடியேதான் சுவாமியுட அரளிப்பூமாலையிட சங்கருக்கு ஆபரண மாலையாச்சு மாலைப் பொலிவழகும் சங்கருட மார்பின் திருவழகும் சேலை கட்டும் சீரழகும் சங்கருட சீரான கட்டழகும் மாலை சுத்தம் திருக்கழுத்தில் மாணிக்கமாலை மார்பில் துலங்குதப்போ அரக்குதிரு மேனியிலே சங்கருக்கு அழுத்தினது சீராவும் முன்னழகும் பின்னழகும் சங்கருட முகத்தின் திருவழகும் அழகும் திருவடிவும் ஆதிபரமேஸ்வரர்க்கு ஒப்பிடலாம் கிழக்கெழுந்த சூரியன் போல் சங்கர் வடக்கு முகம் பார்வையுமாய் பள்ளிகொண்ட பாவனையை சங்கரைப் பார்க்க முடியாதே | | |
|
|