வாக்குப்படியே தான் மாயன் வரவரழைப்பார் உன் உயிரை வானுலகம் போன உயிர் அண்ணா மார்மூண்டு நீ திரும்பி சிவலோகம் போன உயிர் அண்ணா திரும்பி நீ வாருமண்ணா அந்த மொழிகள் சொல்லி உத்தமி ஆடை விரித்தெடுத்து உடுத்தினாள் நற்றுயிலை யிட்டாளே முக்காடு இட்டதொரு முக்காடு தன்னுடைய திரேகம் தெரியாமல் போட்டதொரு முக்காடு தன்னுடைய புறவடிவு தெரியாமல் சந்திரனார் தெரியாமல் உத்தமி தலைநிறைய முக்காடு சூரியனார் தெரியாமல் உத்தமி துகிலால் திறைவளைத்து எடுத்தாள் கரகத்தை உத்தமி கையில் ஏந்தினாள் வேப்பங்குழை ஏந்தியதிருக்கரகம் உத்தமி ஓங்கியது பூங்குழையும் கரகம்தனை ஏந்தி உத்தமி காரிழையாள் நல்ல தங்கம் பட்டபடுகளத்தை அண்ணருட பாரக் குளகளத்தை சென்ன குளகளத்தை உத்தமி சுற்றி வந்து மூன்று தரம் சிவனை நினைத்து உத்தமி ஸ்ரீராமரைத் தானினைத்து எழுதும் பிரமனைத்தான் உத்தமி ஈஸ்வரரைத் தானினைந்து பேர்கொடுத்த பொன்னம்பல சுவாமி பொசிவாசி ஐயரையும் சன்சாயி ஐயரைத் தவங்கொடுத்த புண்ணியரைத் தானினைந்து எடுத்தாள் கரகத்தை உத்தமி ஏந்தினாள் தீர்த்தத்தை தீர்த்தத்தைவாரியேதான் நாலு திசை பார்த்து விட்டெறிந்தாள் |
படுகளம் எழுப்ப தங்கை ஓமதீர்த்தம் வீசுதல் |
வாரியே தீர்த்தத்தை குமாரசங்கு வாள்வீரர் மேல் எறிந்தாள் சித்த மிரங்கியே தான் பரமசிவனாரும் காட்சி தந்தார் மாயனுட காரணத்தால் சங்கர் உயிர் மார்மூண்டு தான் வருதே சிவலோகம் போன உயிர் சங்கருக்கு திரும்பியங்கே வந்திட்டுதே |