தட்டிச்சிலம்பமிட்டார் பொன்னர் தார்வேந்தர் தம்பியர்க்கு கூடிச்சிலம்பமிட்டார் குமாரசங்கு அண்ணருடன் கட்டிப்பிடித்துமப்போ தம்பியரைக் கண்ணோடே சேர்த்தணைத்து கட்டிப்பிடித்து தம்பியரைத்தானமரும் என்று சொல்லி தங்கையரைத்தான் பார்த்து பொன்னர் தானுமப்போ ஏதுசொல்வார்
வாள்வீரர் தேவிகளை அம்மா நீ வைத்து வரலாமா போர் மன்னர் தேவிகளை அம்மா நீ பிரிந்து விட்டுவந்ததென்ன அந்த மொழி கேட்டு உத்தமி அப்போது ஏது சொல்வாள் வாரும் வாருமென்று உங்கள்தேவிகளை வருந்திஅழைத்தேனண்ணா வரமாட்டேன் என்றுசொல்லி என்னுடன் வஞ்சனைகள்செய்தார்கள்
அக்கினிக்கு பூஜை செய்து உங்கள் தேவிகளை அனுப்பி வைத்து வந்தேனண்ணா கானலுக்கு பூஜை செய்து உங்கள் தேவிகளைக் கடத்தி வழி வந்தேனண்ணா