பக்கம் எண் :

488அண்ணன்மார் சுவாமி கதை

தங்கையரைத்தான் பார்த்து பொன்னர்தானுமப்போது ஏதுசொல்வார்
முன்னும் பழிகாரன் உங்கள் சின்னண்ணருக்கு முதல் நாளும் தாயாதிதான்
தாயாதி தன் பலிதான் உங்கள் சின்னண்ணரைத்தான் முடித்துக் கொண்டேன்
உங்கள் பெரியண்ணருட ஆக்கிரமத்தை உத்தமியே பாருமம்மா
அந்த மொழிகள் சொல்லிபொன்னம்பல சுவாமி ஆயுதமெல்லாம் எடுத்து
 
பொன்னர் மடிய வாள் மேல் விழப்போதல்
 
பதினெட்டு ஆயுதமும் வாங்கிப் பொன்னர் பார்க்கின்ற வேளையிலே
பதினெட்டு ஆயுதம் பொன்னருக்கு பழுது பட்டுப் போயிருக்க
பழுது பட்டவர்கள்மேல் விழுந்தால் நமக்கு பரமகதியில்லையென்று
தம்பி சங்கர் சீராவைப்பொன்னர் தானெடுத்துப் பார்க்கையிலே
பழுதொன்றும் இல்லாமல் ஆயுதம் பளீரென்று சோதி மின்னும்

பழுதில்லாவாள் விழுந்து இறந்தால் பரமகதி தானுமுண்டு
தம்பியுட சீராவை பொன்னர் தானும் நிறுத்துகிறார்
அலகு நிறுத்தி வைத்து பொன்னர் அதன் மேலே தான் குதிக்க
வாள்மேல் குதித்து இனி மடிந்த களமாகிடுவோம்
என்று மனதிலெண்ணி பொன்னர் ஈஸ்வரரரைத் தானினைத்து
மாயன் பெருமாளை நினைத்து மாண்டுவிடப் போகையிலே
மாண்டிடுவோம் என்று பொன்னர் மாயன் துதி செய்கையிலே