பக்கம் எண் :

504அண்ணன்மார் சுவாமி கதை

பத்தினி துரோபதையை பாங்குடனே தானழைத்து
வாருமினிப் பஞ்சவரே என்று வகையுடனே தானழைத்து
வீரமலைக்குடையாளுக்கு நீங்கள் விதமுடனே தானும்போய்
ஈஸ்வரியாள் தன்னிடத்தில் இதமுடனே நீங்களுந்தான்
பூலோகமண்டலத்தில் பூஜை மிக வாங்குமென்றார்

அனுப்பி வைத்தார் மாயவனார் ஐவரையுந்தானுமப்போ
மன்னர்கள் ஐவரும் மாயவரை தெண்டனிட்டு
பத்தினி துரோபதையும் பாங்குடனே தெண்டனிட்டு
பொன்னுலகம் விட்டிறங்கி பூவுலகம் வந்தார்கள்
 
  பூசை வாங்க ஐவரும் பூலோகம் வருதல்
 
வீரப்பூர் குடையாளில் விதமுடனே ஐவர்களும்
வந்தார்கள் பூலோகம் வகையான ஐவர்களும்
பஞ்சவர்கள் தானும் பண்புடனே அப்போது
குந்தி மாதேவி மக்கள் குலவீரர் பஞ்சவர்கள்
பாஞ்சால ராஜன் மகள் பத்தினி துரோபதையும்

வீரப்பூர் குடையாளில் விதமுடனே தானிருந்தார்
இந்தப்படி தானும் இதமுடனே வீற்றிருந்து
பொறுமை பொறுத்த பொன்னம்பல சுவாமி
சின்னண்ணர் வாள்வீரர் சிறுபுலி குமாரசங்கு
நல்லதங்கை உத்தமியும் நன்றாகத் தானிருக்க

அத்தைபிள்ளை மைத்துனரும் அவர் தம்பி இருவர்களும்
மலையுடனே தான் பிறந்த மந்திர மகாமுனியும்
வெற்றிமன்னன் பறைநகுலன் வீரபாகு சாம்பானும்
ஒண்டிக் கருப்பண்ணனும் உற்றபடைத் தளமும்
எல்லோரும் தான் கூடி நாம் இந்தமலை தனிலே

இருந்துமிங்கே வாழ்ந்தோ மென்றால் ஏற்காது என்று சொல்லி
பொந்திப்பசி தீர போய் அங்கே மாதாவை