அவர் ஆனைபடைசேனை அத்தை பிள்ளை மூவருமாய் அவர் பட்டதொருநாள் முதலாய் பராமரிப்போர் யாருமில்லை வந்தார்கள் உன்னிடத்தில் வாய்ந்ததொரு காராளர் குதிரை மேலேறியே தான் உன்னை மிரட்டி தொடர்ந்ததுவும் அவர் குற்றம் அல்லாமல் பின்னொருவர் குற்றமில்லை அவருக்கு என்ன குற்றம் செய்தேன் என்னருகில் வாரதற்கு அப்போது கோடங்கி அடைவுடனே ஏதுரைப்பான் உன் ஆசார வாசலிலே அடைவுடனே பந்தலிட்டு மேல் கட்டுகட்டி விதமுடனே தூக்கிவைத்து வாழைக்கரும்புடனே மாவிலையுந்தோரணமும் கட்டியலங்கரித்து காவலர்கள் எல்லோரும் வைகையிலே நீராடி வந்ததுமே யெல்லோரும் ஏழடுக்குத் திருக்கரகம் ஏந்தியே முன்னே வைத்து பெரியமலை மாதாவை பிரபலமாயுண்டு பண்ணி நல்லதங்கை உத்தமியை நடுவே தனைநிறுத்தி ஒற்றைத் திருக்கரகம் ஓங்கியே முன்னே வைத்து அந்தக்காராளர் இருவரையும் காரணமாய் உண்டு பண்ணி வீரமாக முனியும் விதமாக முன்னே வைத்து பெரியமலை மாதாவை பிரபலமாயுண்டு பண்ணி நல்லதங்கை உத்தமியை நடுவே தனைநிறுத்தி ஒற்றைத் திருக்கரகம் ஓங்கியே முன்னே வைத்து அந்தக்காராளர் இருவரையும் காரணமாய் உண்டு பண்ணி வீரமாக முனியும் விதமாக முன்னே வைத்து தவசடி காத்திருக்கும் தந்தன் கருப்பனையும் கடிங்காலுச் சாம்புவனைக் கடக்கவே யுண்டுபண்ணி அவர்பக்தி படர்ந்திருக்கும் பக்கமெங்கும் சூழ்ந்திருக்கும் இந்தப்படியாக இதமாக உண்டு பண்ணி ஆடு பன்றி கோழியது அலங்கரித்து முப்பூஜை | | |
|
|