பக்கம் எண் :

514அண்ணன்மார் சுவாமி கதை

பெரியக்காண்டிக்குப் பூஜை
செய்ய எழுவக்கரியானை அழைத்தல்
 

நம்ம ஊழியத்துக்காரன் உக்கிராணந்தான் காக்கும்
அம்பலக்காரன் வீரமலை ஆன பிள்ளை கண்டாயே
எழுவக்கரியானும் இதமான பிள்ளை கண்டாய்
மாதாவுக்கேற்ற பிள்ளை மன்னன் அவனிருந்து
ஆலோசனை ஏது என்று அலகுரைத்தார் நாய்க்கருமே

நல்லதென்று சொல்லி நாட்டார்களப்போது
எழுவக்கரியானை இதமாகக் கூட்டி வந்து
நீ கங்கை தலை முழுகி கிருபையுடனிப் போது
வாருமென்று சொல்லி வகையாய் அனுப்பிவைத்தார்
வைகை தலைமுழுகி எழுவக்கரியான் வந்தானே அப்போது

அவனுக்கு கட்டுகளுமுள்ள தெல்லாம் கனமாகத் தானணிந்து
ஆபரணம் பூட்டி அழகுபெறத்தானணிந்து
காவியுடை உடுத்தி கழுத்தில் உத்ராட்ச மாலையணிந்து
சாந்து புனுகு சவ்வாது மிகப்பூசி
மல்லிகை ஆரம் வீரப்பூரானுக்கு மாராடி தான் போட்டு

முல்லை மலர்ச்சரத்தை வீரமலைக்கு முடிமேலே தான் சொருகி
கரகத்தில் நீர் மொண்டு கரைமேலே தானும் வைத்து
கரகந்தனை செப்பனிட்டு கனத்த மலர் பூவுகளும்
பூமாலை கொண்டு வந்து பொற்கரகம் தானணிந்து
மருவு மருக்கொழுந்து வாசமுள்ள செண்பகப்பூ

மண்டபத்துக்குள்ளாக எழுவக்கரியானுக்கு வாழையிலை போட்டு
மாதா கரகந்தனை எழுவக்கரியானுக்கு வாழையிலை போட்டு