பக்கம் எண் :

516அண்ணன்மார் சுவாமி கதை

இடது கையில் மணியெடுத்து வலது கையில் தீபமது
எடுத்து வெளியில் வந்தான் எல்லவரும் தான் சூழ
வீரமலைத்திசை நோக்கி விரும்பி அவன் பார்த்து
ஒடுங்கி வணங்கி ஒடுக்கமுடன் நின்றுகொண்டு
தீபதூபம் புகை கொடுக்க தீரன் அவன்மேலே
அந்த நல்லவேளையிலே அக்காண்டி மாதாவும்
மாயமாய் அவன் பேரில் மாதாவும் வந்திடவே
கண்கள் பொறி பறக்க கடகடவென்று நீரோட
மருளுமுகங்கொண்டுமங்கே மண்டபத்தில் தான் புகுந்து
முன்னே ஒரு நாள் முகம் பழகிக்கொண்டாப்போல்

தீபதூபம் தான்கொடுத்தான் தேவி பெரியக்காளுக்கு
தங்காள் பிறவியர்க்கு தான் வணங்கியே கொடுத்து
அண்ணரிருவருக்கும் அத்தை பிள்ளை மூவருக்கும்
வீரமகாமுனிக்கும் வெற்றியுடன் தான்கொடுத்து
தனிக்கருப் பண்ணனுக்கும் தான் வணங்கியே கொடுத்து

வெளியிலே வந்து நின்று எழுவக்கரியான் விதமாக அப்போது
கடிகங்காளைச்சாம்புவனைக் கருத்தில் மிக நினைத்து
கடக்க நின்று தூபம் கட்டினான் அப்போது
ஆலாத்தி தீபம் அனைவருக்கும் தான் கொடுத்து
ஏந்தியே எல்லோர்க்கும் இதமுடனே தான் கொடுத்தான்

திருநீறு தான் கொடுத்தான் திரண்டசபை அத்தனைக்கும்
அந்த நல்ல வேளையிலே எழுவக்கரியான் அதட்டிக்குலவையிட்டு
ஆக்கரித்துப் பல்கடித்து அதட்டி அவன் அப்போது
கரகத்தின் முன்னாலே கட்டழகன் மண்டியிட்டு
திருமுடிமேல் தூக்கிவைத்து தீர்க்கமுடன் நின்று கொண்டு
திருநீறு கையிலெடுத்து திருக்கரம் மேல் போட்டு
வீரப்பூர் தானோக்கி மாதாவை விரும்பியவன் நடந்து
தங்காள் கரகம் தனிக்கரகம் பின்னே வர