பக்கம் எண் :

522அண்ணன்மார் சுவாமி கதை

நாளை திங்கள் கிழமையிலே தீரனுக்குப் பூசையிட
பண்ணிவைத்துத் தன் பதியை பாங்காக இப்போது
நம்ம சீமையிலுள்ள சிறந்தகுடி அத்தனையும்
வரவழையுமென்று வாக்காக சொல்லிடவே
நல்லதென்று பிரதானி நலமாக ஓலைவிட்டார்

ஓலைதனைப்பார்த்து ஊரிலுள்ள நாட்டார்கள்
வீரப்பூர் வந்து வேந்தன் துரை கம்பையனை
கண்டு மிகத்தொழுது கருத்துடனே நிற்கையிலே
கம்பைய நாய்க்கர் கருத்துடனே தான்பார்த்து
சந்தோஷமாக தயவாக ஏது சொல்வார்

வாருங்கள் நாட்டாரே வார்த்தை சொல்லக் கேளுமென்று
காராளர் பொன்னர் சங்கர் காரணமாய்ப்பட்டவகை
நம்ம ஊருக்கு ஊரு உகந்து படைகள் வென்று
நாய்க்கர் உரைக்க நல்ல குடி மன்னவரும்
நாய்க்கரைத்தான் தொழுது நலமாக ஏது சொல்வார்

எந்த விதமாக நாம் படைப்போம் ராஜாவே
அப்போது நாய்க்கர் அவர்களைத் தான் பார்த்து
உங்கள் மனை சுத்தி பண்ணி உத்தமரே நீராடி
உங்கள் மனை தனிலே உயர்ந்ததொரு திண்ணையிட்டு
பந்தலது போட்டு பாங்காய் அலங்கரித்து

வாழைகமுகு வகுப்பாகக் கட்டிவைத்து
பச்சிலையும் தோரணமும் பாங்காகக் கட்டிவைத்து
திங்கள்கிழமை சிவகெங்கை நீராடி
ஏழுடுக்குத் திருக்கரம் இதமாக முன்னே வைத்து
மாதா கரகம் வலது புறம் முன்னே வைத்து

பட்டதொரு காராளர் படை முகத்து வன்னியரை
வலதுபுறமாக வைத்து இலை போட்டு
மந்திர மகாமுனியை வலமாக முன்னே வைத்து
தந்திரமான தனிக்கருப்பண்ணனை பின்னே வைத்து
கட்டவர்க்கம் சோடனையாய் கனமாக முன்னே வைத்து