பக்கம் எண் :

மதுரை வீரன் கதை159

  
அறுபது பொன் எடுத்து
     அபிஷேகம் பண்ணிவைத்து
அரண்மனைக்கு வந்து
     அரசன் கிருமலையும்
வீரனுக்குப் பூசை

2070

     விதமுடனே செய்து
“பூதலத்தில் உள்ளவர்கள்
     பூசைகொடுப்பார்கள்
உன்காவல் உன்அடிமை
     உண்மை உள்ள வீரையனே:
தாங்காத்துக் கொண்டு
     தயவாகக் காரும் ஐயா
ஐயாவே வீரனே
     அனைவரையும் காத்திடுவாய்
அவர் அவர் பங்கில்

2075

     அனுதினமும் நீ இருந்து
என்னையும் காத்து
     இரட்சிக்க வேனும் ஐயா!
என்று திருமலையனின்
     இன்பமுடனே தொழுது
வாழ்மதுரை சொக்கர்
     மதுரை மீனாக்ஷி அம்மாள்
தாங்கள் கிருபையினால்
     தாரணி யோர்வாழ்ந்து இருக்க
நாடு தழைக்க

2080

     நல்ல மழை தான் பொழிய!
 
வாழி
 
தேவர்களும் வாழி
     தேசத்தோர்கள் வாழி
அங்கையற் கண் மீனாக்ஷி
     அம்மையும் தான் வாழி