பக்கம் எண் :

மதுரை வீரன் கதை23

  
மயிலாடி நிற்க
     வாய்த்த பலாத் தோப்பும்
அன்னம் குலாவும்
     அரவிந்தப்9 பூந்தடமும்
வண்ணக் கிளிகள்கொஞ்சும்
     வளமான நல்மரமும்
இன்ன வளம் மிகுந்த

35

     எழில் காசி நன்னாடு
தன்னை உரைக்க சேடன்10
     தன்னாலும் ஆகாதே
 
மலைவளம்
 
வாரணி வாசியைச் சூழ்மலை
     வளத்தைச் சொல்லுகிறேன்
ஆரண11 மாமுனிவர்
     அணியணியாய் தவமிருப்பார்
காட்டுப் பசுவும் கரும் புலியும்
     கலந்து இருக்கும்
நாட்டுப் பசுவோடு

40

     நட்பாய் புலி உலாவும்12
பருந்தும் பைங்கிளியும் ஒரு
     பஞ்சரத்திலே வாழும்
பொருந்து அரவின் வாயில் எலி
     புகுந்து பள்ளி கொள்ளும்
பச்சோந்தியும் மயிலும்
     பட்சமுடன் வாழ்ந்திருக்கும்
கெச்சையும் ஓனாயும்
     செருக்குடனே கூடி நிற்கும்
சிங்கமும் யானையும்

45

     சேர்ந்து விளையாடி நிற்கும்
பொங்கரவும் மந்திகளும்
     பொருந்தி உறவாயிருக்கும்