வண்ணக் கிளிகள் கொஞ்சும் வாகான18 இல்லங்களும் போர் தொழில் கற்க மன்னர் |
95 |
புரிந்திட்ட நல்லிடமும் எல்லா வளமும் இரைந்த திருக்காசிநகர் |
மன்னன் மகிமை |
வல்லாண்மை மன்னர் பலர் வந்து பணியும் நகர் இந்த திருநகரில் என்றும் வரன் முறையாய் தன்னம் தனியே தனி செங்கோல் தான்செலுத்தும் மன்னும் பொறுமையாலே |
100 |
வண் பூமிக்கு ஒப்பானோன் கன்னல் இளமாறனைப் போல் கட்டழகு தன்னுடை யோன் சொன்ன மொழி தவறான் சொல் அரிச்சந்திரன்தான் கன்னன் கொடை மாற கனகம் அளித்திடுவோன் மன்னு அவன் போரிலே வள்ளி மணவாளன் ஒப்பான் சொல்லு மனு நீதியிலே |
105 |
தூயதச ராஜனையான் தொல் உலகை ஆளும் துளசி மகா ராஜன் மங்காது நீதி நெறி மாநிலத்தை ஓர் குடைக் கீழ் செங்கோல் செலுத்தி செயல் பெற்று வாழ் நாளில் |