பக்கம் எண் :

28மதுரை வீரன் கதை

  
அரசவைக் கோலம
 
சொல்லு அமைச்சர்19 சூழ்ந்து வரத்                                         

110

     துளசி மகாராஜன
வல்லமுடி20 தரித்து
     மனு செங்கோல் கை பிடித்து
ஆலவட்டம் சாமரைகள்
     அணி அணியாய் வீசிவர
கோலம் உள்ள மாதர் நிறை
     கும்பம் எடுத்து வர
ஆலத்தி தீபம்
     அறிவை மாதர் தாங்கி வர
சீல மறையோர்கள
     செய21 வாழ்த்து கூறி வர
கன்னியர்கள் ஆடிவரக்

115

     கணிகைமார் பாடி வர
மன்னர் படை நெருங்க
     மற்றும் உள்ளோர் தான் நெருங்க
வட்டக் குடை பிடிக்க
     வாள் வீரர் கைபிடிக்க
பட்டுக் கொடை பிடிக்க
     பல விருது தான் பிடிக்க
பற்பல வாத்தியங்கள்
     பறவை போல் சத்தம் இட
சொற்புலவோர் நாற் கவியும்

    120

     சொல்லி துதித்து நிற்க
சின்னங்கள் எல்லாம்
     சிறப்பாய் பிடித்து நிற்க
மன்னிய22 நாற் சேனை
     வகை வகையாய்ச் சூழ்ந்து நிற்க
அட்ட சிங்கம் தாங்கும்
     ஆஸ்தான மண்டபத்தில்
பட்ட23 மன்னரோடு
     பண்பாய்க் கொலு இருந்தான்?