|
எண்ணியொரு வாரமதில் எப்படியும் நான்பிடித்து |
நன்னுமுயிர்த் தூண்டியிலே நான்போட்டு வைக்கின்றேன் பார் |
|
சேனைபடை கூட்டிச் சேப்பிளையான் அப்போது |
ஆனபடை மன்னருடன் அரசனையும் தெண்டனிட்டு |
|
வெற்றித் தமுக்கடித்து வெங்கலக் கொம்பூதி |
மெத்தெனவே கோட்டைவாசல் வெளியே வந்துநின்று |
|
மற்றுநிகர் ஒவ்வாத மைந்தன் பரிமணத்தை5 |
சித்தமதில் எண்ணித் தேவியர்க்குச் சொல்லுகிறான் |
|
வீரரையும் தான்கூட்டி விரசுடனே சேப்பிளையான் |
திருவரங்கம் பேட்டை தன்வீடு வந்து சேர்ந்து |
சேப்பிளையான் மனைவியிடம் சொல்லுகிறான் |
சங்கப்பிள்ளை6 ஆகியதோர் தையலரே கேட்டருள்வாய் |
“வக்கணையாய் நாம்வளர்த்த மைந்தனார் செய்தபிழை |
|
என்னவென்று சொல்வேன்யான் இயல்பான மனைவியரே |
தண்ணீர்த் துறையில் தானே சிறையெடுத்துப் |
|
போனதொரு காத்தவனைப் பிடித்துக் கழுவில்போட |
ஆனதினால் மன்னவனார் அனுப்பிடவே வந்தேன்டி. |
|
ஏவும் பணிமுடிக்க என்னலாகுமோ தான் |
காவலனார் சொல்லைக் கடக்கவும் போறதில்லை” |
|
புருஷனது சொல்லப் பெண்கொடியாள் சங்கப்பிள்ளை |
வருசைமகன் செய்தபிழை மனசுமிகத் தான்வாடி |
|
மனைவி கூற்று |
“கண்ணாளா ! கட்டழகா ! காத்த பரிமணமே |
பண்ணாத காரியமாய் பாப்பாரப் பெண்தனையே |
|
ஆற்றில் சிறையெடுக்க லாகுமோஇக் காலம்தன்னில் |
காத்தவனே உன்னைநான் கனமாய் வளர்த்தேனே” |
|
அழுதவளைச் சேப்பிளையான் அகங்கையாலே அமர்த்தி |
“பளுவந்த பின்பு பாடியழுதால் போமோ |
|
தேவிதனைக் கையால் சேர்த்தே யெடுத்தணைத்து |
ஆவிதனை விட்டதனால் ஆவதுண்டோ? |
|
பின்புத்தி தான்நினைக்கும் பறச்சிபெத்த7 பிள்ளைவயன் |
நாம்பெத்த பிள்ளையென்றால் நம்மைப்போல் ஆகாதோ? |