காத்தவராயன் கதைப்பாடல்17

எண்ணியொரு வாரமதில் எப்படியும் நான்பிடித்து
நன்னுமுயிர்த் தூண்டியிலே நான்போட்டு வைக்கின்றேன் பார்
 
சேனைபடை கூட்டிச் சேப்பிளையான் அப்போது
ஆனபடை மன்னருடன் அரசனையும் தெண்டனிட்டு
 
வெற்றித் தமுக்கடித்து வெங்கலக் கொம்பூதி
மெத்தெனவே கோட்டைவாசல் வெளியே வந்துநின்று
 
மற்றுநிகர் ஒவ்வாத மைந்தன் பரிமணத்தை5
சித்தமதில் எண்ணித் தேவியர்க்குச் சொல்லுகிறான்
 
வீரரையும் தான்கூட்டி விரசுடனே சேப்பிளையான்
திருவரங்கம் பேட்டை தன்வீடு வந்து சேர்ந்து
சேப்பிளையான் மனைவியிடம் சொல்லுகிறான்
சங்கப்பிள்ளை6 ஆகியதோர் தையலரே கேட்டருள்வாய்
“வக்கணையாய் நாம்வளர்த்த மைந்தனார் செய்தபிழை
 
என்னவென்று சொல்வேன்யான் இயல்பான மனைவியரே
தண்ணீர்த் துறையில் தானே சிறையெடுத்துப்
 
போனதொரு காத்தவனைப் பிடித்துக் கழுவில்போட
ஆனதினால் மன்னவனார் அனுப்பிடவே வந்தேன்டி.
 
ஏவும் பணிமுடிக்க என்னலாகுமோ தான்
காவலனார் சொல்லைக் கடக்கவும் போறதில்லை”
 
புருஷனது சொல்லப் பெண்கொடியாள் சங்கப்பிள்ளை
வருசைமகன் செய்தபிழை மனசுமிகத் தான்வாடி
 
மனைவி கூற்று
“கண்ணாளா ! கட்டழகா ! காத்த பரிமணமே
 பண்ணாத காரியமாய் பாப்பாரப் பெண்தனையே
 
 ஆற்றில் சிறையெடுக்க லாகுமோஇக் காலம்தன்னில்
 காத்தவனே உன்னைநான் கனமாய் வளர்த்தேனே”
 
 அழுதவளைச் சேப்பிளையான் அகங்கையாலே அமர்த்தி
 “பளுவந்த பின்பு பாடியழுதால் போமோ
 
 தேவிதனைக் கையால் சேர்த்தே யெடுத்தணைத்து
 ஆவிதனை விட்டதனால் ஆவதுண்டோ?
 
 பின்புத்தி தான்நினைக்கும் பறச்சிபெத்த7 பிள்ளைவயன்
 நாம்பெத்த பிள்ளையென்றால் நம்மைப்போல் ஆகாதோ?