பக்கம் எண் :

10கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

பழங்காலக் கவிஞர்களையெல்லாம் இழித்துப் பேசி விடுவ தாலும், தம் காலக் கவிஞர்களையெல்லாம் பழித்து நகைத்து விடுவதாலும் தாம் மட்டும் கவிஞராகி விடுவதாகச் சிலர் நினைப்பு. இவர்கள் கவிஞர்கள் அல்லர்; தாம் அமர்ந்திருக்கும் `கோடு குறைக்கும்’ அறிஞர்கள். பழைய இலக்கியங்களின் அமைப்பு, போக்கு, நடை முதலிய சிறப்புக்களை இவர்கள் திரும்பியும் பார்ப்பதில்லை. இதனால் இவர்கட்குப் பரம்பரை உணர்வும் வாய்ப்பதில்லை.

பாரதிதாசனைத் தந்தை என்றும் பாரதியைப் பாட்டன் என்றும் உரிமையோடு கூறிக் கொள்ளும் முடியரசன். அவர்களைப் போலப் பரம்பரையுணர்வு மிக்கவர். பழைய தமிழ் இலக்கிய மரபுகளைக் கற்றுப் போற்றுபவர். இதனால்தான் `வாழையடி வாழை என’ வந்த கவிஞர் கூட்டத்தில் சிறப்புடைய ஒருவராக இவர் திகழ்கிறார்.

சில கவிஞர்களிடையே மற்றமொரு குறை உளது. இந்நாட்டுக் கவிஞராகத் திகழ ஆசைப்படும் இவர்கள் தமிழைப் புறக்கணிக் கின்றனர். தமிழ் இலக்கிய, இலக்கண அறிவை இழித்துரைக் கின்றனர். தமிழ், தமிழினம், தமிழ்நாடு என்பதெல்லாம் குறுகிய மனம் எனக் குறை கூறுகின்றனர். மேனாட்டுக் கவிதைகள் பற்றித் தாம் கேட்டதையும் ஒரு சில பார்த்ததையும் வைத்துக் கொண்டு அந்நாட்டு மரபுகளையே பின்பற்றுகின்றனர். அவற்றையே புகழ்ந்து திரிகின்றனர். இதற்குச் சார்பாக `யாம் இந்நாட்டிற்கு மட்டும் உரிய, குறுகிய மனம் படைத்த கவிஞர் அல்லேம், உலகக் கவிஞராவோம்’ என்று இறுமாந்து பேசுகின்றனர்.

பாரதியையும் தாகூரையும் அறிந்தால் இவர்கட்கு உண்மை விளங்கும். அவர்கள் தங்கள் நாட்டுக்கு முழு உரிமையுடைய கவிஞர்களாகத் திகழந்துதானே உலகக் கவிஞர்களாக உயர்ந் துள்ளார்கள். அவ்வாறன்றி `உடனே உலகக் கவிஞராகும் போக்கு’, காலூன்றி நடக்கப் படிக்காத குழந்தை. தாவப் படித்த கதையாகும். மேலும் இத்தகையவர்கள் நிலை, காலம் மாறி விதைக்கப்பட்ட பயிர் போலவும் இடம் மாறி நடப்பட்ட செடி போலவும் இரங்கத் தக்கதாக முடியும்.