பக்கம் எண் :

104கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

கோடையிலே வருந்தாமல் முள்ளால் கல்லால்
    கொடுமையொன்றும் நேராமல் நடப்ப தற்குச்
சோடையின்றிச் செருப்பளிப்போன் இவர்க ளெல்லாம்
    தொடக்கூடாச் சாதிஎன்றால் தொலைக வையம்!

வளமிக்க நாடென்பர் இந்த நாட்டில்
    வாழஒரு வழியின்றி வறுமை தன்னால்
உளம்நொந்து கூலிகளாய்ச் செல்லு கின்றார்
    ஒப்பற்ற என்னினத்தார்; வேற்று நாட்டார்
கிழங்கென்றும் கீரைஎன்றும் எண்ணி நம்மைக்
    கீழாக்கி விட்டஇந்த நிலை யொழிக்கக்
களங்காண வேண்டாவோ வீரம் மிக்க
    காளைகளே ஏனின்னும் பாழு றக்கம்? 4