பக்கம் எண் :

106கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

பதுங்கி வந்தது பாழும் பூனை;
ஒதுங்கி நடப்பினும் உயிர்பெறல் அரிதென
மீண்டும் சென்று கூண்டுள் நுழைந்தேன்
மீளா அடிமை நேர்ந்தது மேலும்;
என்னிலை தானே இந்நாட் டவர்க்கும்!
நன்னிலை தந்தான் நலமுயர் காந்தி
விடுதலை என்றே வெளியில் வந்தனர்;
கெடுதலை உள்ளம் கிடைத்ததைச் சுருட்டும்
சுரண்டல் பூனை துரத்தல் காணீர்!
இருண்ட வாழ்வுதான் ஏகுவ தென்றோ?
பூனைகள் தொலையும் பொழுதுதான் என்றோ?
கொடுமை கொடுமை என்று
கூவிச் சலித்தது கூண்டுக் கிளியே! 37