பக்கம் எண் :

முடியரசன் கவிதைகள்107

விறகு வெட்டி

அறுசீர்விருத்தம்

மனிதரின் நிலைமை கண்டு
    மனத்தினில் கவலை கொண்டு
தனியிடம் சென்றேன் ஓர்நாள்;
    `தடியனே மூடா!’ என்று
முனியனை அடித்துக் கையை
    முறுக்கியே இழுத்துச் சென்றார்.
`இனிஎனை அடிக்க வேண்டாம்
    இமைப்பினில் இறப்பேன் ஐயோ!’

என்றவன் குரலைக் கேட்டேன்
    இடிந்ததென் உள்ளம் ஆங்கே;
கொன்றிடும் கூட்டத் தோடும்
    கோட்டையுள் நுழைந்தேன்; நீதி
மன்றினில் தலைமை தாங்கும்
    மனிதரும் வினவ, ஓய்ந்து
குன்றிய உயிரைத் தாங்கும்
    கூலியும் வாய்தி றந்தான்

`இரண்டுநாள் உண்டே னில்லை,
    இருமலால் துடித்தாள் பெண்டு;
சுருண்டன பிள்ளை எல்லாம்
    சோற்றுநீர் இன்மை யாலே,
இரந்துயிர் வாழ்வ தற்கும்
    என்மனம் இடந்த ராமல்
விரைந்துநான் விறகு வெட்ட
    வெளிப்புறக் காட்டில் சென்றேன்