பக்கம் எண் :

114கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

கடலுக்குள் வலைவீசும் மக்கள் கூட்டம்
    கரையோரம் வாழ்கின்றார்; காற்ற டித்தால்
தடதடவென் றோடிவிடும் அவர்கள் வீடு;
    தவறாமல் தெருத்தோறும் கோவி லுண்டு;
மடமையொடு சாதிபல உண்டு; பிச்சை
    வாழ்வினரும் மிகவுண்டு; கண்டி வற்றைத்
திடமிக்க என்னுள்ளம் நொந்து சிற்றூர்
    திரும்பிவந்தேன்; சிறுமைஎலாம் அழிவ தென்றோ? 4

(முதன் முதலாகச் சென்னைப் பட்டினத்தைக் கண்டு பாடிய பாடல்.)