பக்கம் எண் :

126கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

துயில் கலைந்தது

நிலைமண்டில ஆசிரியப்பா

பாண்டியர்க் குரித்தெனப் பாடும் பெருமை
பூண்டிடும் நல்ல பூம்புனல் வையைக்
கரைமிசை அமர்ந்தேன், கற்றவர் இருவர்
உரைபல நிகழ்த்தினர் உறுபயன் தருமெனச்
செவிகொடுத் திருந்தேன்; சிவநெறிச் செல்வர்
நவையறு தமிழ்நயம் நவிலத் தொடங்கினர்;
“ஓதிய மொழிகள் பலவுளும் உயர்ந்திடும்
ஆதி சிவன்தரும் அருமைத் தமிழை
ஏட்டில் எழுதி எரிதினில் இட்டோம்
பாட்டின் ஓலை பசுமையோ டிருந்தது;
விரைபுனல் ஆற்றில் விடுத்தனம் அதனை;
கரையவர் வியந்திடத் திரைபிளந் தெதிர்த்து
நீந்தும் மீனென நீள்கரை சேர்ந்தது;
வேந்தனும் கண்டனன்; விளைபுகழ்த் தமிழின்
பெருமையை விளக்கும் பெற்றியன் றோ?”என,
“அருமை! அருமை!” என்றனர் அருகர்;,
“நீவிர் புகன்ற நெருப்பிலும் நீரிலும்
பாவுடன் தமிழைப் பாங்குடன் எழுதி
இட்டோம் நாங்களும் எரிந்தன அழிந்தன!
சிட்டரே தமிழின் சிறுமையைப் பாரீர்!”
சமணர் இங்ஙனம் சாற்றினர்; “உங்கள்
சமயச் சிறுமையைச் சாற்றுவ ததுவே
தமிழின் குறைவெனல் சரியிலை” எனமன
அமைதி குலைந்திட அறைந்தனர் சைவர்;