எவ்வளவு அழகிய கற்பனை. இன்றைய குழப்ப அரசியலைக் கூட ஒரு கணம் மறந்து, இக்கற்பனை இன்பத்திலே நாம் ஈடுபட்டு விடுகிறோம். மேலும் “பட்டிக்காட்டான்”, “இளமையில் நரை” என்ற கவிதைகளும் இன்றைய வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டு கின்றன. “காவலும் களவும்” என்ற தலைப்பில் இவர் நாட்டுத் தலைவர்களின் நன்றி கெட்ட செயலை மிகவும் கடிந்துரைக் கின்றார். இவ்வாறு, பல இடங்களில் இவர் தாய் நாட்டுக்காக வழக்காடும் முறையிலே பாடுகிறார். தன் கட்சியை, அடித்துப் பேசும் வழக்கறிஞனைப் போலக் காணப்படுகிறார். கவிஞருக்கு ஏன் இந்த வேலை என்று கேட்பவர்களுக்கு, உலகை ஆளும் - அறிவிக்கப்படாத - சட்டமன்ற உறுப்பினர்களே கவிஞர்களே* என்ற ஆங்கிலக் கவிஞர் ஒருவரின் கருத்தைத்தான் விடையாகக் கூற வேண்டும். வின்செஸ்டர் என்னும் இலக்கியத் திறனாய்வு அறிஞர், `கவிஞன் ஒரே ஒரு வரியினாலே - சில சமயங்களில் ஒரே ஓர் அடைமொழியினாலே கூட உணர்ச்சி நிறைந்த உயிரோவிய மொன்றை நம் கற்பனையிலே பளிச்சிடச் செய்யமுடியும்’ என்று கூறிக் கவிஞனின் ஆற்றலை விளக்குகிறார்.* கைவல்ல ஓவியன் சில வரை கோடுகளை இழுத்து உயிருள்ள ஓவியத்தைப் படைத்து விடுவது போன்றது இது. நாற்று நடும் பெண்களைச் “சுழன்றாடும் குழல்மாதர்” என்னும்போது அவர்களது இயக்கம் உணர்த்தப்படுகிறது. `கால் இழுத்துத் தவழ்கின்ற குழந்தை’ என்றதும் நம் முன்னர்த் தவழ்ந்து வரும் குழந்தையையே நாம் காண்கிறோம். `விரிகொம்பு மான்’ என்பது ஓர் ஓவியம். `தும்பி எழுந்து ஆர்க்கின்ற முல்லை’ என்பது ஓர் ஒளிப்படம். `மண்தின்றால் தீமை என அறியாப்பிள்ளை’ குழந்தையின் வயதையும் இயல்பையும் காட்டும் கருவி. சினந் துரைக்க நீச் சிந்து `பசித்த கண்கள்’ என்பது வறுமைக் காவியம். ஆம், பணம் உடையவர்கள் சினந்துரைப்பதும் பசித்தவர்கள் அழுவதும் தானே உலகத்தின் கடைச்சரக்கு. காவியங்களின் கைச்சரக்கு, வயிற்றிலே பொங்கி எழுந்த பசி, கண்களிலே வெளிப்படுவதைப் பார்த்துப் `பசித்தகண்கள்’ என்று கூறுகிறார்.
“Poets are the unacknowledged legislators of the word” - P.B. Shelly. *In a single line, sometimes in a single epithet the Poet can flash upon our imagination a Picture that shall seem filled with passionate emotion - C.T. WINCHESTER. |